News April 25, 2024

தந்தைக்காக வாக்குச் சேகரித்த நடிகை நேஹா

image

பிஹாரின் பாகல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் ஷர்மாவுக்கு ஆதரவாக அவரது மகளும், நடிகையுமான நேஹா ஷர்மா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ரோடு ஷோ நடத்திய அவருக்கு வழி நெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நேஹா ஷர்மா, அன்புக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

News April 25, 2024

பணத்தைச் சேமிக்க ’முதல் வார விதி’

image

சேமிப்பில் ஒழுக்கத்தைக் கொண்டு வர ’முதல் வார விதி’ அவசியமானது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். சம்பளம் வந்ததும் தேவைகள், விருப்பங்கள் போக மீதியை சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களிடம் இருக்கிறது. ஆனால், இந்த முறையிலான சேமிப்பு பலன் கொடுக்காது எனக் கூறப்படுகிறது. மாறாக சம்பளம் வந்த முதல் வாரத்திற்குள் 20% பணத்தை சேமிப்பதே சிறந்தது.

News April 25, 2024

பள்ளி மாணவர்களைத் தண்டித்தால் நடவடிக்கை

image

மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனையைத் தடுக்கத் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிகளை அமல்படுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறித் தண்டனை வழங்கினால் அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஐகோர்ட், விதிகள் அமலாவதைக் கண்காணிக்க ஆசிரியர், பெற்றோர், மூத்த மாணவர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.

News April 25, 2024

என்னைக் கேலி செய்கிறார்கள்…

image

கடலில் மூழ்கிப் பிரார்த்தனை செய்ததை காங்கிரசார் கேலி செய்வதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், தான் மிகுந்த பக்தியுடன் கிருஷ்ணரைப் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார். காங்கிரசார் கேலி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், யது குலத்தோர் என அழைத்துக் கொள்ளும் சமாஜ்வாதியினரும் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பது வியப்பாக உள்ளது என்றார்.

News April 25, 2024

தேர்தலுக்கு ₹1.35 லட்சம் கோடி செலவு

image

மக்களவைத் தேர்தலுக்கு ஆகும் மொத்தச் செலவு ₹1.35 லட்சம் கோடி எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சி செய்யும் செலவும் தேர்தல் செலவுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதன்படி “The Centre for Media Studies” என்ற நிறுவனம் தேர்தல் செலவு குறித்து நடத்திய ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. 2019இல் தேர்தல் செலவு ₹66 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 2 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

News April 25, 2024

நீட் தேர்வு மையம் தொடர்பான விவரம் வெளியீடு

image

நீட் தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. MBBS, BDS போன்ற படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வர்கள் தேர்வு எழுதும் மையம் தொடர்பான விவரங்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவிட்டு விவரங்களை அறியலாம்.

News April 25, 2024

ஐஎஸ் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈராக்

image

ஈராக்கில் 11 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நசிரியா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு நீதித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் இத்தண்டனை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2017இல் ஈராக் படைகளால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.

News April 25, 2024

உலக மலேரியா நாள்: பாதுகாப்பாக இருக்க…

image

உலக மலேரியா நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் ஆண்டுக்கு சுமார் 7 இலட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். குளிர் காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா நோயில் இருந்து பாதுகாக்கக் கொசு வலையைப் பயன்படுத்தலாம். அதிகாலை நேரங்களில் நீளமான ஆடைகளை அணியலாம். வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

News April 25, 2024

‘கில்லி’ டீம் ஃபைனல் வந்தது எப்படி?

image

‘கில்லி’ திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், செமி ஃபைனலில் தோற்ற அணி எப்படி ஃபைனலுக்கு வந்தது என்ற கேள்வி எழுவதோடு, அவ்வப்போது ட்ரோல் செய்யப்பட்டும் வந்தது. இது குறித்துச் சமீபத்தில் விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் தரணி, பெஸ்ட் ஆஃப் 3 என விளக்கம் அளித்துள்ளார். செமி ஃபைனலில் வெற்றி பெற்ற கோப்பையை வேலுவின் தங்கை அவரது தந்தையிடம் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

News April 25, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு

image

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!