India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் பெரியார் படம் பதித்த வடிவமைப்பில் வெளியான ‘தீட்டு’ என்கிற பாடல் ஆல்பத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. உடலியல் காரணங்களுக்காக பெண்களை ஒதுக்கி வைக்கும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கையை விமர்சித்து, ‘தீட்டு’ பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவிஎம்மில் சின்னங்களை பதிவேற்றம் செய்யும் SLU இயந்திரங்களை சீலிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு குறைந்தது 45 நாள்களுக்கு பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூறிய உச்சநீதிமன்றம், SLU இயந்திரங்கள் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கவும், அதில் வேட்பாளர்களும், பிரதிநிதிகளும் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்தது. இவிஎம்முடன் 45 நாள்களுக்கு பாதுகாக்கவும் ஆணையிட்டது.
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உ.பியில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கடவுளை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததாக கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீதிபதி விடுமுறை எடுத்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மே மாதம் மொத்தம் 7 நாள்களுக்கு வங்கிகள் செயல்படாது. மே 1 உழைப்பாளர்கள் தினம் விடுமுறையாகும். இத்துடன் (மே 5, 12, 19, 26) ஞாயிற்றுகிழமைகள், 2வது (மே 11), 4வது (மே 25) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக மலையாள நடிகர் பிஜு மேனன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இப்படத்திற்காக 1 வருடத்திற்கு கால் ஷீட் கொடுத்துள்ளேன் என்றும், படம் முழுக்க தனது கதாபாத்திரம் பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2010இல் ‘போர்க்களம்’ படத்தில் நடித்த அவர், 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நடைமுறையை கண்மூடித்தனமாக வெறுப்பது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் எனக் கூறிய நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாள்களுக்குள் EVMஇல் உள்ள மைக்ரோ கன்ட்ரோலை சோதிக்க வேட்பாளர் அனுமதி கோரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஈரானிடம் இருந்து ரஷ்யாவுக்கு டரோன்கள் கொண்டு செல்ல உதவியதாக 3 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஈரான் உதவி செய்கிறது. இதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து ட்ரோன்கள் கொண்டு செல்ல உதவியதாகவும், நிதியுதவி செய்ததாகவும் கூறி, 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.
உலகின் பிரமாண்ட சொகுசுக் கப்பல்களில் ஒன்றான ”எம் எஸ் தி வேர்ல்ட்” சென்னை வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இந்தக் கப்பலில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதில் பலர் நிரந்தரமாக குடியிருப்பு வாங்கி தங்கியுள்ளனர். 89 சுற்றுலா பயணிகள், 280 மாலுமிகளுடன் இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகம் வந்துள்ளது. அக்கப்பல் விசாகபட்டினம் இன்று மீண்டும் புறப்பட்டு செல்கிறது.
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்த நீதிமன்றம், தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அனைத்து வித விசாரணைகளையும் நடத்தியதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து, விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனது கவனம் ஐபிஎல்லில் மட்டும் தான் இருப்பதாக என குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம் எனவும், தற்போது உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால் அது குஜராத் அணிக்கு அநீதி இழைப்பது போன்றது எனவும் தெரிவித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் 900 ரன்களுக்கு மேல் குவித்த அவர், ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பிடித்தார்.
Sorry, no posts matched your criteria.