India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிபிஐ-க்குள் அதிகாரத்தையும் பதவியையும் கைப்பற்றுவதற்கான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் அக்கட்சியின் மாநில மாநாட்டில், புதிய செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் காரணமாக மாநிலச் செயலாளர் முத்தரசன் & மூத்த தலைவர் சுப்பராயன் ஆகிய இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே உச்சக்கட்ட பனிப்போர் நடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு என்ற பிரசாரத்துடன் மக்களவைத் தேர்தலை நடத்தி வருகிறது. இதில் நேற்று உ.பி.,யில் 8 தொகுதிகளுக்கு நடந்த 2ஆம் கட்டத் தேர்தலில் 54.85% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அம்ரோகாவில் 64.02%, மிகவும் குறைந்தபட்சமாக நடிகை ஹேமமாலினி களமிறங்கிய மதுராவில் 49.29% (50%க்கும் கீழ்) வாக்குகள் பதிவாகியுள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6, 7ஆம் வகுப்புகளுக்கு 3ஆம் பருவ தேர்வு மதிப்பெண், கிரேடுகளை பதியுமாறும், 8ஆம் வகுப்புக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதியுமாறும் கூறப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து ஆசிரியர் குழு ஒப்புதலுடன் முடிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் – சிபிஎம் இடையே நடந்துவரும் வார்த்தை மோதல் நெருடலைத் தந்திருப்பது உண்மைதான் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “வயநாட்டுக்கு ஆனி ராஜாதான் புதியவரே தவிர, ராகுல் அல்ல. கடந்த தேர்தலில், கேரளாவின் 20 தொகுதிகளில் 19இல் வென்றோம். இம்முறையும் பெரிய வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்றுவரை வீசுமென்று ரெட் அலர்ட் விடுத்துள்ள IMD, பிஹார், ஜார்கண்ட், தெலங்கானா, ராயலசீமா, உள்கர்நாடகா, தமிழ்நாடு, கிழக்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசுமென்றும் தெரிவித்துள்ளது.
2ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து, 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்றும் நடைபெற்றது. இதன்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 189 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது.
மோடி மீண்டும் பிரதமரானால் விவசாயிகளை பழிவாங்குவார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் போராட்டத்தால் 2021இல் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததென்றும், மோடி மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார். மோடி, கருநிற கோப்ரா போன்றவர், மீண்டும் பிரதமரானால், விவசாயிகளை பழிவாங்காமல் விட மாட்டார் என்றும் அவர் எச்சரித்தார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால், வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர்போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல அவரின் மா.செ பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதேபோல், கொங்கு, தென் மாவட்ட அமைச்சர்கள் பெயர்களும் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்றைய 43ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் இருப்பதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 15 முறையும், மும்பை அணி 19 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தென்மாநிலங்களில் 42 முக்கிய அணைகளின் நீர்மட்டம் பெரும் சரிவடைந்துள்ளது. மத்திய நீர்வள ஆணைய புள்ளி விவரங்களில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள 42 அணைகளில் 2023ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 53.3 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் இருந்ததாகவும், தற்போது 8.8 பில்லியன் க்யூபிக் மீட்டர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை குறைவாக பெய்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.