India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023 – 24 நிதியாண்டு மற்றும் அதன் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று அல்ட்ரா டெக் சிமென்ட், ட்ரென்ட், யூகோ வங்கி, டாடா கெமிக்கல்ஸ், ஜில்லெட் இந்தியா, பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், எல்ஜி பாலகிருஷ்ணா அண்ட் பிரதர்ஸ் உள்ளிட்ட 31 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகிறது. முடிவுகளைப் பொறுத்து, அந்நிறுவன பங்கு விலையில் தாக்கம் இருக்கும்.
ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஹைதராபாத் அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிப் போட்டிகளில் பங்காற்றிய வீரர் என்ற புதிய மைல் கல்லை அடைந்தார் எம்.எஸ்.தோனி. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருமுறைகூட அவுட்டாகாத வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில், ரேவண்ணா மீது பாலியல் தொல்லை, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, இவரின் மகன் பிரஜ்வால் 100க்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
*சிவப்ரியனான நந்தியை வழிபடுவதற்கு முன் சிவபெருமானை வழிபடக் கூடாது. *சண்டிகேஸ்வரரை கைத்தட்டி வணங்கக் கூடாது. *கொடி மரத்தை தவிர்த்து வேறெங்கும் விழுந்து சாஷ்டாங்கமாக கும்பிடக் கூடாது. *பலிபீடம், நந்தி, கோபுரம் போன்றவற்றின் நிழலை மிதிக்கக் கூடாது. *சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது. *நடந்துகொண்டே நெற்றியில் திருநீறு இடக்கூடாது. *ஸ்தல விருட்சமான வில்வத்தைப் பறிக்கக் கூடாது.
ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படமானது வரும் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.
இளநிலை & முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை நாளைக்குள் (ஏப்.30) சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது. சமா்ப்பிக்காத கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 212/3 ரன்கள் குவித்தது. இதன் மூலம், T20 கிரிக்கெட்டில் அதிக முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்த (35 முறை) முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது. சோமர்செட் – 34, இந்தியா – 32, பெங்களூரு – 31 முறை பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
▶நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது: வைகோ
▶ராகுல் காந்தி இந்துக்களை வெறுக்கிறார்: எல்.முருகன் விமர்சனம்
▶காங்கிரஸ் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை: பிரதமர் மோடி
▶மோடி பொய் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்: சித்தராமையா
▶INDIA கூட்டணிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்: மம்தா பானர்ஜி
▶IPL: சென்னை அணி வெற்றி
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK வீரர் தேஷ்பாண்டே அசத்தலாக பந்துவீசியுள்ளார். 3 ஓவர்கள் வீசிய அவர், 27 ரன்கள் கொடுத்து டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அன்மோல்பிரீத், பேட் கம்மின்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 10 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி, 134 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது. இது, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
காங்கிரஸ் கொடுத்த திட்டங்களை விட, அதிக திட்டங்களை பிரதமா் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளாா் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த அவர், நிதியை பொருத்தவரை மாநில பேரிடா் நிவாரணத்தை கணக்கிட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.