India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் வயநாடு அருகே தமிழர்கள் அதிகம் வாழும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. கடந்த 24ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என மாவோயிஸ்டுகள் எச்சரித்ததையடுத்து, அப்பகுதியில் அதிரடிப்படை சோதனை நடத்தி வந்தது. இதில் இன்று இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த நிலையில், மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.
நாடு முழுவதும் உள்ள 100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட சென்னை மற்றும் ஓசூரில் உள்ள பல தனியார் மருத்துவமனை உட்பட 100 இடங்களிலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரசின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், பாஜகவின் 10 ஆண்டுகால சாதனைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் கவனித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்த அவர், 60 ஆண்டுகளில் உலகம் பல்வேறு மாற்றங்களை கண்ட நிலையில், காங்கிரசுக்கு விவசாயிகளுக்கு தண்ணீரை கூட தர முடியவில்லை என்றார். மேலும், பல்வேறு நீர் பாசன திட்டங்களை காங்கிரஸ் கிடப்பில் வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார்.
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னமனூரில் உள்ள கம்மவார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பையும் மீறி, ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக TTV தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 6 – 6.5% வரை இருக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வளர்ச்சி 8 – 8.5%ஆக இருக்காது எனத் தெரிவித்த அவர், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற 9 – 10% வளர்ச்சி அவசியம் என்றார். நாட்டில் வளர்ச்சி இருக்கும்போது, வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அவை அதிகரிக்கவில்லை என அவர் தெரித்தார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 95ஆவது கூட்டம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழக அரசின் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கவுள்ளார். ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, கடந்த பிப்.1 – ஏப்ரல் 29 வரை 7.3 டிஎம்சி நீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 2.3 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர், கண்கோர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்புப் படையினர், நக்சலைட்கள் இடையே தாக்குதல் நடந்த நிலையில், 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 87 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 150 பேர் வரை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பாலா தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படத்தில், மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னர், இந்தப் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில், ஒருசில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்ப்பதாகவும், இதுபோன்ற வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வால் போட்டியிடும் நிலையில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.