India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 5 – 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துநர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், தக்க பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
T20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், பயிற்சியாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்நிலையில், டிராவிட் மீண்டும் விண்ணப்பிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று அவர் விண்ணப்பிக்கவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
ஆஸ்கர் விருது வென்ற RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், அமெரிக்காவில் நடைபெற உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ், ஆஸ்கர் விருது விழாவில் கௌரவிக்கப்பட உள்ளது. இந்திய இசையின் பெருமையை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் இவ்விழாவானது, வரும் 18ஆம் தேதி டேவிட் ஜப்பேன் தியேட்டரில் நடத்தப்படவுள்ளது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘லகான்’ படங்களின் பாடல்களும் கௌரவிக்கப்படவுள்ளன.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உ.பி.யில் அக்பர்பூர் உள்ளிட்ட நகரங்களின் பெயர் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளாா். சில ஊர்களின் பெயரை உச்சரித்தால் வாயில் கெட்ட சுவை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அக்பர்பூர் மட்டுமல்லாமல், அலிகார், அசம்கார், ஷாஜகான்பூர் போன்ற பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததால், CSK அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, எஞ்சி இருக்கும் 2 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். ஆனால், பலம் வாய்ந்த ராஜஸ்தானுடனும், ப்ளே-ஆஃப் கனவுடன் இருக்கும் பெங்களூருவுடன் மோதுவது சென்னை அணிக்கு சவாலாக இருக்கும்.
இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 280 பேரிடமிருந்து உறுப்புகள் தானம் பெறப்பட்டு 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2023இல் தமிழக அரசு அறிவித்தபடி, இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 59 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. KKR, RR-16, SRH-14, CSK, DC, LSG-12, RCB, GT-10, MI, PBKS-8 புள்ளிகளுடன் உள்ளன. மும்பை, பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறின. இன்னும் 11 போட்டிகளே உள்ளதால், ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், கொல்கத்தா அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், நிகில் நாகேஷின் ‘கில்’ (இந்தி), ப்ரீத்தி பாணிக்ரஹியின் ‘கேர்ள் வில் பி கேர்ள்ஸ்’ (Girls Will Be Girls) ஆகியப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று முதல் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபடவுள்ளார். இதனால், தற்போதைய அரசியல் நிலவரம், தேர்தல் பிரசார உத்திகள், பாஜகவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் உடனடித் தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றிபெற வேண்டும். இப்போதில் இருந்தே படித்தால் கண்டிப்பாக ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் மறுதேர்வில் வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் நடை போடுங்கள்.
Sorry, no posts matched your criteria.