News April 10, 2024

பிரிந்த ஜோடியை சேர்த்து வைத்த பேஸ்புக்!

image

அமெரிக்காவில் பேஸ்புக்கின் சக்தியை அறிந்து கொள்ள, ஓராண்டுக்கு முன் தன்னையும், தனது 2 குழந்தைகளையும் விட்டு திடீரென மாயமான கணவர் சார்லஸை கண்டுபிடித்து தரக்கோரி ஆஷ்லி என்பவர் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆஷ்லியின் பழைய எண்ணுக்கு அழைத்த கணவர் சார்லஸ் விரைவில் வீடு திரும்புவதாக கூறியுள்ளார். கணவர் கிடைத்ததால் ஆஷ்லி தனது பழைய பதிவை நீக்கியுள்ளார்.

News April 10, 2024

கோடை வெயிலால் வியர்க்குரு பிரச்னையா?

image

கோடைகாலம் வந்தாலே சிலருக்கு வியர்க்குரு பெரிய பிரச்னையாக இருக்கும். அவர்கள் கற்றாழை ஜெல்லை தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்து வந்தால் வியர்க்குருவை குறைக்கலாம். அரிப்பு உள்ள இடங்களில் ஐஸ் கட்டி கொண்டு தேய்த்தால் வியர்க்குரு பிரச்னை நீங்கும். சந்தன பவுடரை பன்னீருடன் கலந்து பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தேய்க்க விரைவில் சரியாகும்.

News April 10, 2024

இதை செய்தால் ஊடுருவலை நிறுத்துவோம்

image

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லையில் ஊடுருவலைத் தடுக்கவில்லை என அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். தக்சின் தினாஜ்பூரில் பிரசாரம் செய்த அவர், வாக்குகளுக்காக மம்தா பானர்ஜி ஊடுருவலை அனுமதிப்பதாக விமர்சித்தார். அசாமில் பாஜக ஊடுருவலை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் பாஜக 30 தொகுதிகளை வென்றால் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.

News April 10, 2024

தமிழ்நாட்டிற்கு எதிராக வாக்கு கொடுக்கும் சித்தராமையா

image

மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி தரவில்லை. அதனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மக்களுக்கு உறுதியளித்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசு மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்., கட்சியின் இந்த நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News April 10, 2024

ஜீரோ பேலன்ஸ், சொத்து இல்லை

image

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 பேருக்கு சொத்துகளே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் 10 பேர் தங்களுக்கு அசையும் சொத்தோ, அசையா சொத்தோ இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதுபோல், தமிழகத்தில் 7 சுயேச்சை உள்ளிட்ட 8 பேர் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

News April 10, 2024

BREAKING: ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கு விடுமுறை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு -தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள் போன்றவை வழக்கம்போல் இயங்கும் என்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம்.

News April 10, 2024

இந்தியாவில் 14% ஐபோன்கள் தயாரிப்பு

image

கடந்த நிதியாண்டில் 14 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் தயாரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மொத்த தயாரிப்பில் 14% ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏறக்குறைய 67% போன்களையும், பெகாட்ரான் கார்ப் நிறுவனம் 17% போன்களையும் தயாரித்துள்ளன. இதனிடையே, தமிழ்நாட்டின் ஓசூரில் மற்றொரு ஆலை நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News April 10, 2024

IPL: பழைய ஃபார்முக்கு திரும்புவாரா மேக்ஸ்வெல்?

image

நடப்பு ஐபிஎல் தொடரில், RCB வீரர் மேக்ஸ்வெல் பெரியளவில் ஜொலிக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். நடந்து முடிந்த 5 போட்டிகளில், 0, 3, 28, 1, 0 என சொற்ப ரன்களே எடுத்துள்ளதால், அணியின் பேட்டிங் லைனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மும்பைக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் தன்னை நிரூபிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News April 10, 2024

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி மாநில பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ ராம்வீர் சிங் பிதுரி, சிறை நெறிமுறைகள் அவரை சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதிக்காது. அதனால், அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இல்லையெனில், சட்டம் தன் கடமையை செய்யும் என எச்சரித்தார்.

News April 10, 2024

சர்ச்சையில் சிக்கிய மெட்ரோ ரயில் நிர்வாகம்

image

பெங்களூருவில் சுத்தமான ஆடை அணியாத இளைஞரை மெட்ரோ ரயிலில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டையின் மேல் பட்டன் அணியும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், சுத்தமான ஆடை அணிந்து வரும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் போதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்ததாகவும், பிறகு அனுமதித்ததாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!