India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை 4ஆம் கட்டத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர சட்டப்பேரவையில் உள்ள 175 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதேபோல் ஒடிசா சட்டப்பேரவையில் உள்ள 147 தொகுதிகளில் 28க்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும், தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளன.
அதானியின் கிரீன் எனர்ஜியிடமிருந்து அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மன்னார் & பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை கிரீன் எனர்ஜி அமைக்க உள்ளது. இந்த நிலையங்களில் 484 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு (கிலோவாட் ஹவருக்கு) $8.26 அமெரிக்க டாலரை கொடுக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் மீதமிருக்கையில் அபார வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டனான தோனியின் பெயர், 8ஆவது வீரராக வரிசையில் இருந்ததால், அவர் பேட் செய்யவில்லை. அத்துடன் இன்றைய போட்டியுடன் தோனி ஓய்வு பெறலாம் என செய்திகள் நிலவியதால், அவரின் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தோனி ஓய்வு எதையும் அறிவிக்காததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிரபல நடிகர் மோகன், “ஹரா” எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள அந்தப் படத்தில், சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்த படம் ஜூன் 7இல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு வெளியாகும் மோகன் படம் என்பதால், அந்த படம் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘அயர்ன் செய்யாத ஆடை அணிவோம்’ என்ற பிரசாரத்தை CSIR தொடங்கியுள்ளது. ஓர் ஆடையை இஸ்திரி செய்வது கூட கார்பன் (CO₂) உமிழ்விற்கு வழிவகுப்பதால், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, திங்கட்கிழமைகளில் அயர்ன் செய்யப்படாத ஆடைகளை ஊழியர்கள் அணியலாம் என CSIR தெரிவித்துள்ளது. CSIR-இன் 37 தேசிய ஆய்வகங்களில் 7,683 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு முன்பு, கடந்த 2ஆம் தேதி நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்திலும், கடந்த 7ஆம் தேதி டெல்லி அணியிடம் 20 ரன் வித்தியாசத்திலும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
பொறியியல் படிப்பில் சேர, இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். +2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, உயர்கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மே 6 முதல் தற்போதுவரை 1,00,699 மாணவர்கள் BE படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில், 56044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர்.
பெங்களூருவில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி, ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இது ஆர்சிபி வீரர் கோலியின் 250ஆவது ஐபிஎல் போட்டியாகும். தோனி, ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் 250க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் ஒரே அணிக்காக விளையாடவில்லை. கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடுகிறார். இதனால் ஒரே அணிக்கு 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.