India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடிகர் கஞ்சா கருப்பு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் நேர்த்திக் கடன்களை செலுத்தியதாகக் கூறிய அவர், இபிஎஸ் ஒரு விவசாயி என்பதால் அவருக்கு தான் விவசாயிகள் படும் துயரங்கள் தெரியும் எனத் தெரிவித்தார்.
ஸ்விப்ட், கிராண்ட் விடாரா மாடல் கார்கள் விலையை மாருதி சுசூகி நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக மாருதி சுசூகி திகழ்கிறது. அந்நிறுவனம் ஸ்விப்ட் மாடல் கார்கள் விலையை இன்று முதல் ₹25,000 உயர்த்தியுள்ளது. கிராண்ட் விடாரா மாடல் கார்கள் விலையை ₹19,000 உயர்த்தியுள்ளது.
கோவையில் மின் கட்டண உயர்வால், ஜவுளித்தொழில் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் எல்.முருகன், அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் மாநிலங்கள் வளர வேண்டுமென்பதே பாஜகவின் நோக்கம். திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. சுரண்டல், ஊழலின் மற்றொரு பெயர் திமுக” என்றார்.
புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு ₹8 வரை (25Kg – ₹200) குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. பருவமழை பொய்த்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து ரக அரிசிகளின் விலையும் குறையும் என்பதால் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தல தீபாவளி கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி என ஓபிஎஸ் கூறியுள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் துயரத்துக்கு ஆளாகி வருவதாகவும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.
மின்சார கார்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டெஸ்லா பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. உலகில் அதிக அளவு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனமாக திகழும் டெஸ்லா, இந்தியாவிலும் கார் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக கூட்டாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதன்கீழ் கார்களை தயாரிப்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டெஸ்லா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
நெல்லை மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து அக்கட்சித் தலைமைக்கு நாங்குநேரி காங்கிரஸார் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். அதில், நெல்லையில் ராபர்ட் புரூஸ் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல என்றும், ராபர்ட் புரூஸ் தோற்பதற்கான வேலைகளை ரூபி மனோகரன் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சாலை விபத்தில் சிக்கி கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 2018-ம் ஆண்டு வெளிவந்த ‘கினாவல்லி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரசாரக் கூட்டங்களில் அதிமுகவை பாஜகவும், பிரதமர் மோடியும் விமர்சிக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்டோர் பிரசாரத்தின் போது திமுகவையும், முதல்வர் மு.க. ஸ்டாலினையும் வசை பாடுகின்றனர். ஆனால் அதிமுகவையோ, இபிஎஸ்சையோ கடுமையாக விமர்சிப்பது இல்லை. இது தேர்தலுக்கு பிறகு மீண்டும் 2 கட்சிகளும் கூட்டணி சேருமா என்பது உள்ளிட்ட பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.