News May 14, 2024

கே.எல்.ராகுலை கட்டியணைத்த கோயங்கா

image

SRHக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் LSG அணி படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து, மைதானத்தில் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல்.ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தினார். இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுலை நேற்றிரவு விருந்துக்கு அழைத்த கோயங்கா, அவரை கட்டியணைத்து வரவேற்றுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

News May 14, 2024

₹10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

image

புதுக்கோட்டையில் ₹10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கடல் வழியே படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சென்ற படகை மறித்து அவர்கள் சோதனை நடத்தினர். இதில் ₹10 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

News May 14, 2024

சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்களின் வசதிக்காக

image

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம் பதிவு செய்யலாம் என ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர்கள் மூலம், முகத்தை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ளலாம்.

News May 14, 2024

ஆம் ஆத்மி பெயரை சேர்க்க உள்ளோம்

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரை சேர்க்க இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தற்போது இடைக்கால ஜாமினில் உள்ளார். இதனிடையே, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையில், ஆம் ஆத்மி பெயரை சேர்க்க உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு கூறியுள்ளது.

News May 14, 2024

இதற்குப் பெயர்தான் சமத்துவமா?

image

கிரிக்கெட்டில் ஆண், பெண் சமத்துவத்திற்காக ஊதியத்தை உயர்த்துவது நல்லது என்றாலும், பல விஷயங்களில் ஒருசார்பாக இருப்பது கவலையளிக்கிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆஷா ஷோபனாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே கலந்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 14, 2024

தேர்தலில் மோடிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

image

தேர்தலில் மோடி 6 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதாகவும், தேர்தல் விதிகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டி பாத்திமா என்பவரால் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகும்படி கூறி விசாரிக்க மறுத்தனர். இதையடுத்து மனுவை மனுதாரர் திரும்ப பெற்றார்.

News May 14, 2024

சூறைக் காற்றுடன் கனமழை

image

காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோடை வெயிலால் தவித்து வந்த மக்கள், வெப்பம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 14, 2024

KURKURE-க்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி

image

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது கணவரிடம் ₹5க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர், போலீசில் புகார் அளித்த கையோடு விவாகரத்து பெற்றுத் தரக் கேட்டுள்ளார். இதைக்கேட்ட போலீசார், திருமண பந்தத்தை காக்கும் நோக்கில், 2 பேரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

News May 14, 2024

காங்., உருவாக்கியதை தாரைவார்த்தார் மோடி

image

காங்கிரஸ் தொடங்கிய பெரிய திட்டங்களை எல்லாம் பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் உருவாக்கியதை விட, 10 ஆண்டுகளில் பாஜக உருவாக்கியதுதான் அதிகம் என மோடி கூறிவருவதாகத் தெரிவித்த பிரியங்கா, கடந்த 70 ஆண்டுகளில் காங்., உருவாக்கியதை எல்லாம் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் என சாடியுள்ளார்.

News May 14, 2024

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் கலவரத்தில் 3 பேர் பலி

image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கோதுமை மாவு விலை, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்கக்கோரி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் அரசு 23 பில்லியன் நிதி ஒதுக்கியதால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!