News April 11, 2024

நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு

image

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக உறுதியளித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆதரவு அளிப்பதாக கராத்தே செல்வினின் மனைவி வயோலா அறிவித்துள்ளார். ராக்கெட் ராஜா – ஹரி நாடார் இடையே மோதல் வெடித்ததால் நாடார் சமூக வாக்கு பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

News April 11, 2024

அப்துல் கலாமின் குரு காலமானார்

image

இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இயற்பியல் பாடம் கற்பித்த பேராசிரியரும், அருட்தந்தையுமான லடிஸ்லாஸ் சின்னத்துரை (101) இன்று காலமானார். ஆசிரியப் பணி, இறைத்தொண்டிலும் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். கலாம் தமிழ்நாடு வரும்போது எல்லாம், அவரை சந்தித்து ஆசிபெற்று, நீண்ட நேரம் உரையாடுவார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி

image

ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியாவிடம், ரூ.4.3 கோடி மோசடி செய்த அவர்களது ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவை போலீசார் கைது செய்துள்ளனர். பாலிமர் என்ற நிறுவனத்தை மூவரும் அமைத்த நிலையில், சகோதரர்களுக்கு தெரியாமல் வைபவ் தனது லாப பங்கை 20%இல் இருந்து 33%ஆக உயர்த்தியதோடு, வேறொரு நிறுவனத்தையும் நிறுவியிருக்கிறார். இந்த உண்மை ஹர்திக் பாண்டியாவுக்கு தெரியவர, அவர் போலீசில் புகார் அளித்தார்.

News April 11, 2024

Apply Now: 3,712 காலிப் பணியிடங்கள்

image

2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுக்கான (CHSL) விண்ணப்பத்தை, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதில், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளார்க் உட்பட 3,712 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு, 12ஆவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் மே 7ஆம் தேதிக்குள் <>www.ssc.nic.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 11, 2024

சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி

image

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டிய நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னை எப்.சி.(27 புள்ளிகள்) பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. 3 வருடத்துக்கு பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு செல்கிறது சென்னை அணி.

News April 11, 2024

சிவகங்கையில் அமித் ஷாவின் சாலைப் பேரணி ரத்து

image

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சிவகங்கையில் நாளை மேற்கொள்ள இருந்த சாலைப் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் தேவநாதனை ஆதரித்து நாளை அமித் ஷா சாலைப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பேரணி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

News April 11, 2024

அரசியலில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் விலகல்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால், அரசியலில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி விலகியுள்ளார். கடந்த தேர்தலில் சிக்கபள்ளாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இம்முறையும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த மொய்லி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

News April 11, 2024

சொந்தக் கட்சியினரே குழிப்பறித்தால் எப்படி?

image

கொ.ம.தே.க.வின் நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன் அதிமுகவிடம் தனது வெற்றியைப் பறிகொடுக்க வாய்ப்பிருப்பதாக திமுக தலைமைக்கு உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட் அளித்துள்ளதாம். எதிர்க்கட்சிகளை விட மாதேஸ்வரனின் சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக அதிகளவில் பரப்புரை செய்கிறார்களாம். இதன் பின்னணியில், சூரியமூர்த்தியின் உள்ளடி வேலைகள் (முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்) இருப்பதாகக் கூறப்படுகிறது.

News April 11, 2024

தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த நடிகை ராதிகா

image

விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தெலுங்கில் பேசி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சந்திரகிரிபுரம், சீனியாபுரம் ஆகிய பகுதிகளில் மொழிச் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் உள்ளனர். மக்களை கவரும் வகையில் பேசிய அவர், “மத்தியில் 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் மோடி. தமிழக மக்களும் அவரது வெற்றியில் பயன்பெற வேண்டும்” எனத் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.

News April 11, 2024

IPL: ஷுப்மன் கில் புதிய சாதனை

image

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 72(44) ரன்கள் குவித்தார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக 3,000 ரன்களை கடந்த 4ஆவது வீரர் மற்றும் முதல் இளம்வீரர் என்ற பெருமைகளை பெற்றார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!