News April 12, 2024

அம்பேத்கரே திருப்பி வந்தாலும் இது நடக்காது

image

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசியலமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரே திரும்ப வந்தாலும் அரசியலமைப்பை அழிக்க முடியாது என்றார். எமர்ஜென்சி காலத்தில்தான் அரசியலமைப்பு ஆபத்தில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், 370 பிரிவை நீக்கியதற்காக அம்பேத்கர் தன்னை ஆசீர்வதிப்பார் என்றார்.

News April 12, 2024

அஞ்சு குரியன் – தர்ஷன் ஜோடிக்கு திருமணமா?

image

‘கனா’ படத்தில் நடித்து பிரபலமானவர் தர்ஷன், நடிகை அஞ்சு குரியனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. அவர்கள் திருமணம் செய்தது மாதிரியான புகைப்படங்களும் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், அது நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

News April 12, 2024

கோவை தொகுதியில் விலகியது ஏன்?

image

கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய முடியாது என்று பாமக அறிவித்துள்ளது. அதற்கு காரணங்களாக (1) வேட்பாளர் பாமக அலுவலகத்திற்கு வரவில்லை (2) வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு பாமகவை அழைக்கவில்லை (3) வேட்புமனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை (4) பாஜக பிரசாரங்களுக்கு பாமகவுக்கு அழைப்பு இல்லை (5) பாஜக பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என்று பாமக பட்டியலிட்டுள்ளது.

News April 12, 2024

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி

image

2013ஆம் ஆண்டைப் போன்று, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “டெல்லியில் கடந்த 25 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இல்லை. ஒரு தேர்தலில் கூட பாஜக வென்றதில்லை. இப்போது தேர்தல் நடந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார் என அவர்களுக்கு தெரியும்” என்றார்.

News April 12, 2024

அமித் ஷாவின் திருமயம் பயணம் ரத்து

image

மழை காரணமாக புதுக்கோட்டை திருமயத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு திருமயம் கோட்டையில் உள்ள கால பைரவர் கோயிலுக்கு அவர் செல்வதாக இருந்தது. இதனிடையே திருமயம் பகுதியில் மழை தொடர்வதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாதென கூறப்படுகிறது. இதனால் மதுரையில் நடைபெறும் ரோடு ஷோவில் மட்டும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

News April 12, 2024

இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள்

image

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது இரும்புச்சத்து. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பராமரிக்கப்படும். அந்த வகையில், கீரைகள், நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள், பாசிப்பயிறு, சோயா, பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகள், மீன், டார்க் சாக்லேட் ஆகியவற்றை சாப்பிடலாம். இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் காஃபி, டீ மற்றும் பால் போன்ற உணவுகள் உதவுகின்றன.

News April 12, 2024

நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது

image

தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை, தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாமென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லை பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. I.N.D.I.A கூட்டணியை பொறுத்தவரை, நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விடுகிறோம். மாநில அரசு வேண்டுமென்றால் வைத்து கொள்ளலாம். வேண்டாமென்றால் விட்டுவிடலாம்” என்றார்.

News April 12, 2024

முன்னணியில் இருக்கும் மாநிலங்கள்

image

இந்தியாவில் பொருளாதார அளவில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின், உள் மாநில உற்பத்தியை (GSDP) வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை அளவிடலாம். அந்த வகையில் இந்தியாவின் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், உ.பி., கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 7 இடங்களில் உள்ளன.

News April 12, 2024

ஆர்சிபி அணிக்கு கோலி மீண்டும் கேப்டன்

image

ஆர்சிபிக்கு கோலியை மீண்டும் கேப்டனாக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி எளிதில் வென்றது. அதிக ரன்கள் குவித்தும் ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி, ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், டு பிளசிஸ் கேப்டனாக இருப்பதால் கோலியால் எதுவும் செய்ய முடியவில்லை, கோலியை கேப்டனாக்கினால் ஆர்சிபி போராடி வெல்லும் எனக் கூறியுள்ளார்.

News April 12, 2024

ரூ.18,000 கோடிக்கு பங்குகளை விற்கும் VI

image

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் ஐடியா கடும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.16,000 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரூ.18,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான FPO வெளியீடு ஏப்ரல் 18 – 22ஆம் தேதி நடைபெறுகிறது. Price Band ரூ.10 – 11ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!