News April 13, 2024

கடன் தொல்லை நீக்கும் வழிபாடுகள்…

image

சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாற்றி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும். இல்லறத்தில் மகிழ்ச்சி பெருகும்.

News April 13, 2024

சற்றுமுன்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்.19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்கு பின் விசாரணைக்கு வரும் எனவும் தெரிகிறது. குறிப்பாக, கோடநாடு வழக்கு ஏப்.22, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

News April 13, 2024

குரூப்-சி பணிகளுக்கு ஜூன், ஜூலையில் தேர்வு

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் +2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே.7ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.ssc.gov.in என்ற தளத்தில் அறியலாம்.

News April 13, 2024

IPL வரலாற்றில் புதிய சாதனை

image

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகள் மற்றும் 11 பந்துகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுக்கு எதிராக 160+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை டெல்லி அணி பெற்றுள்ளது.

News April 13, 2024

நாட்டில் பிளவை ஏற்படுத்தவே சாதிவாரி கணக்கெடுப்பு

image

நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சின்ட்வாராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிரானது அல்ல என்றும், ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது மக்களிடையே பிளவை ஏற்படுத்தத்தான் என்றும் விமர்சித்தார்.

News April 13, 2024

பைக்கில் வாக்கு சேகரித்த நடிகை ராதிகா

image

நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள ராதிகா நடிகை ராதிகா கடந்த 10 நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஜீப்பில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், குறுகலான இடங்களில் தனது கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். இருவரையும் கண்ட பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.

News April 13, 2024

திமுக – காங்., கூட்டணி வெற்றிபெறும்

image

கோவையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் நேற்றிரவு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது சாதாரண தேர்தல் அல்ல, சிந்தாந்த யுத்தம். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போரில் திமுக – காங். கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று பெருமிதம் தெரிவித்தார்.

News April 13, 2024

மோடி மீண்டும் பிரதமராவது 101% உறுதி

image

மோடி 3ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்பது 101 சதவீதம் உறுதி என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக அரசு நம்பர் ஒன் அரசு எனப் பெருமைப்பட்டு வருகிறது. போதையிலும், கஞ்சா விற்பனையிலும்
தான் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மக்கள் நலனில் தமிழகம் கடைசியில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

News April 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை – முதல்வர் ஸ்டாலின்
➤ மக்களவைத் தேர்தல் ஒரு சிந்தாந்த போர் – ராகுல் காந்தி
➤ தஞ்சையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புரை
➤ ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் தடுத்தது – மோடி
➤ மே 16 அன்று வெளியாகும் ‘மகாராஜா’ திரைப்படம்
➤ தமிழக வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி

News April 13, 2024

மோடியின் கல்லூரி பட்டத்தை போல் நினைக்காதீர்கள்

image

சிவசேனா கட்சி மோடியின் கல்லூரி பட்டத்தை போல போலி அல்ல என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது. பரப்புரைக்காக மும்பை வந்த பிரதமர், உத்தவ் அணியின் சிவசேனாவை போலி என விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, யார் போலி என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தெரிய வரும் என்று பதிலளித்துள்ளார்..

error: Content is protected !!