India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிச்சை பாத்திரத்தை ஏந்தியபடி பாகிஸ்தான் சுற்றுவதாக மோடி விமர்சித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், கையில் வெடி குண்டுகளை வைத்து கொண்டு, 70 ஆண்டுகளாக பிரச்னை கொடுத்த பாகிஸ்தான், மத்தியில் பாஜக தலைமையில் வலுவான அரசு இருப்பதால் கையில் பிச்சை பாத்திரத்தை ஏந்தி சுற்றுவதாகவும், இந்தியாவுக்கு தொந்தரவு அளிக்கும் முன்பு 1,000 முறை எதிரிகள் தற்போது யோசிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சிறப்பு குழு மனுவை ஏற்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் மூலம் கைது வாரண்ட் பெறப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு, இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியுள்ளது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்தியா-தைவான் நாடுகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், இந்தியா சீனாவை எதிர்கொள்ள உள்ளது.
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் 2024 எலோர்டா கோப்பை பாக்ஸிங் போட்டியில், இந்தியா 2 தங்கம் வென்றுள்ளது. மகளிருக்கான 52 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில், நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தினார். அதேபோல், 48 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில், மீனாட்சி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் மற்றொரு கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தினார். இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.
பிரதமர் மோடியின் ‘பயோபிக்’ படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பெரியாரை பின்பற்றும் சத்யராஜ் எப்படி மோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ள அவர், வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்றும் கூறினார். மேலும், நாத்திகம் பேசிய எம்.ஆர்.ராதா ஆன்மிகவாதியாக நடித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன், விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷனுக்கான பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. மேலும், ஜூலை 2ஆவது வாரத்தில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
CSK அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 1 Four, 2 Six என விளாசி அசத்தினார். இதனால், ஐபிஎல் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டினார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா – 2295 (வான்கடே), டிவில்லியர்ஸ் – 1960 (சின்னசாமி) ரன்களுடன் உள்ளனர்.
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கியது. 3 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மைதான ஊழியர்கள் கவர்கள் கொண்டு மைதானத்தை மூடினர். 15 நிமிடங்கள் தொடர் மழைக்கு பிறகு, மழை லேசாக குறைய தொடங்கியது. பின், முற்றிலும் மழை நின்றதால், போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. கோலி 19, டு பிளசி 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 1800 309 3793 (இந்தியா), 80690 09901 (அயல்நாடு) புகைப்பட அடையாள அட்டைக்கு https://nrtamils.tn.gov.in இணையத்தில் பார்வையிடுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 40% வாகனங்களுக்கு காப்பீடு இல்லை என்ற புதுத்தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறும் வாகனங்களுக்கு காப்பீடு மூலம் அபராதம் விதிப்பதை உறுதி செய்யக்கோரும் மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 60% வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு உள்ளது. இதனால் விபத்தில் சிக்குவோர் தேர்ட் பார்டி காப்பீடு மூலம் நிதி கூட பெற முடிவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.