India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பிளாஸ்டிக் லைட்டர்களினால் இத்தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு, தற்காலிக தீர்வு காணும் பொருட்டு உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தியாகும் தீப்பெட்டியில் 90% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
கவனமாக பேசுங்க, அதிமுக ஒரு மாதிரியான கட்சி என்று அண்ணாமலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், அதிமுகவை அழிப்பேன் என்று அண்ணாமலை ஆணவத்தில் பேசியிருப்பதாகவும், கவனமாக அவர் பேச வேண்டும், அதிமுக ஒரு மாதிரியான கட்சி என்றும் எச்சரித்தார். பதவி வருகையில் பணிவு வேண்டும், இல்லையேல் பதவி நிலைக்காது என்றார்.
மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு மத்தியில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மத்தியில் ஆள பாஜக கூட்டணிக்கு 10 ஆண்டுகள் மக்கள் வாய்ப்பு அளித்து விட்டனர், இதுவே அக்கூட்டணிக்கு போதுமானது என்றும் அவர் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக நாளை வெளியிட உள்ளது. பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் முன்னிலையில் சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “மோடியின் உத்தரவாதம், 2047ல் வளர்ந்த இந்தியா” என்ற தீம் கொண்டதாக மக்களவைத் தேர்தல் அறிக்கை இருக்குமென்றும் பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த 10 நாள்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.54,240க்கும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,780க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் பாஜக பூத் சிலிப் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. திமுக வாக்குச்சாவடி முகவருக்கு வந்த குறுந்தகவலில், இணையதள இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும், அதனை கிளிக் செய்தால் ஓடிபி கேட்பதாகவும், பின் வாக்காளர் எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்தால் பாஜகவின் பூத் சிலிப் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 18 அன்று இந்திய வீரர் விராட் கோலியின் மெழுகு சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் நஹர்கார் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கோலியின் சிலையை நிறுவ வேண்டுமென குழந்தைகளும், இளைஞர்களும் வேண்டுகோள் விடுத்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலையானது உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே கிரிக்கெட்டின் அடையாளமாக விராட் கோலி விளங்குகிறார்.
இந்திய விமானப்படை முன்னாள் விமானி ராகேஷ் ஷர்மா, 1984இல் விண்வெளிக்கு சென்றார். இந்நிலையில் தற்போது விஜயவாடாவை சேர்ந்த கோபிசந்த் தொட்டகுரா, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் மூலம் சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார். இதன்மூலம் விண்வெளி செல்லும் 2வது இந்தியர், முதல் இந்திய சுற்றுலா பயணி எனும் பெருமை பெறுவார். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.
ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்திருந்தார். அதன்படி, ஜெயிலர் 2 படத்திற்கு ‘ஹுக்கும்’ (Hukkum) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; கட்சி நிர்வாகிகளும் மரியாதை கொடுப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுவதால், அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.