News May 19, 2024

அங்கன்வாடியில் போதையில் ரீல்ஸ்; ரூ.10 அபராதம்

image

வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரின் மகன் சரண், நண்பர்களுடன் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் போதையில் புகைபிடித்தபடி கேங்க்ஸ்டர் தோரணையில் கத்திகளுடன் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்காக ரூ.10, ரூ.200 மற்றும் ரூ.1,000 அபராதம் விதிப்பதற்கான ஐ.பி.சி 510, 290, 448 ஆகிய சாதாரண பிரிவுகளின்கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

News May 19, 2024

ஹைதராபாத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு

image

PBKS-SRH இடையேயான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணிக்கு 215 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. பிரப்சிம்ரன்- 71, அதர்வா டெய்ட்- 46, ரிலீ ரோசோவ்-49 ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 214/5 ரன்கள் குவித்தது.

News May 19, 2024

திமுகவுக்கு மீண்டும் தேர்தல் பணி செய்ய பி.கே. ஒப்புதல்

image

அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பணி செய்தார். பிறகு எந்த அரசியல் கட்சிக்கும் இனி பணி செய்யப் போவதில்லை என அவர் அறிவித்தார். இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த அவரிடம் திமுக தரப்பில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பணியாற்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இதற்கு நீண்ட யோசனைக்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News May 19, 2024

மீடியாக்கள் எல்லை மீறுவதாக ரோஹித் குற்றச்சாட்டு

image

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் மீடியாக்கள் எல்லை மீறுவதாக ரோஹித் ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், தனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாமென தனியார் சேனலிடம் கேட்டுக் கொண்ட போதிலும் அது ஒளிபரப்பப்பட்டது என்றும், இது தனியுரிமையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்குமிடையே உள்ள நம்பிக்கையை உடைக்கும் என குறிப்பிட்டார்.

News May 19, 2024

காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது

image

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது, அது முடிவுக்கு வரவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். சோபியான், அனந்த்நாக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 2 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

News May 19, 2024

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News May 19, 2024

அதிமுகவுக்குள் விரிசல்?

image

சேலத்தில் இபிஎஸ் தனது 70ஆவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியபோது, அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் யாரும் சேலம் செல்லவில்லை. தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. பிறகு, எக்ஸ் பக்க பதிவில் வேலுமணி வாழ்த்து தெரிவித்த போதிலும், அவர்களிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

News May 19, 2024

அரைசதம் கடந்தார் பிரப்சிம்ரன்

image

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் அரை சதம் கடந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 6 Four, 4 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இது அவரது 3ஆவது ஐபிஎல் அரைசதம் ஆகும். முழுக்க முழுக்க இந்திய வீரர்களை கொண்டு களமிறங்கியுள்ள பஞ்சாப் அணி, பலம் வாய்ந்த ஹைதராபாத்தை வீழ்த்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். யார் வெற்றி பெறுவார்?

News May 19, 2024

தோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட ஜெயக்குமார்

image

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தோனி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், தோல்வி விளிம்பில் சிஎஸ்கே இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன், இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தியதாகவும், ஆனால் அவர் அடித்த கடைசி சிக்சரை பார்த்து ஓய்வு இல்லை என உறுதி செய்ததாகவும், சாம்ராஜ்யங்கள் சரியலாம், சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை என பதிவிட்டுள்ளார்.

News May 19, 2024

பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு

image

ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பொருட்கள் 50கி சாக்கு பைகளில் அனுப்பப்படுகிறது. இந்த பைகளை ₹20 வரை கூட்டுறவு சங்கங்கள் விற்கின்றன. இது அவர்களுக்கு வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க உதவியது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் பை மூலம் அனைத்து கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இது ஒரு பை ₹3 மட்டுமே விலை போவதால் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!