India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு பரிசுத்தொகையை முதல் அமைப்பாக உலக தடகள சம்மேளனம் அறிமுகம் செய்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆக.11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், 48 விதமான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் தங்கம் வெல்லும் தடகள வீரருக்கு பதக்கத்துடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41.80 லட்சம்) பரிசாக வழங்கப்படும்.
கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண பலாப்பழம் சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், குடிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னைக்கு ஓபிஎஸ்ஸால் மட்டுமே தீர்வு காண முடியும். மோடியுடன் எந்த நேரத்திலும் பேசக்கூடிய ஓபிஎஸ்ஸை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
PM கரீப் கல்யாண் திட்டத்தில், தகுதியற்ற பலரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்ததால் மீண்டும் அவர்கள் பெயரை சேர்க்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ரேஷன் கார்டில் உங்கள் பெயரை சேர்க்க, உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும் என பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், 200 தொகுதிகளில் கூட வெற்றிபெறாது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற தேர்த பரப்புரையில் பேசிய அவர், மோடியின் உத்தரவாதத்திற்கு இறையாகாதீர்கள். அவை தேர்தலுக்காக கூறப்படும் வெற்று வாக்குறுதிகள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தையே பாஜக அழித்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
RCB வீரர் மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல்லில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 3 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார். இவர் மோசமாக விளையாடி வருவதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலே உள்ள படத்தை பார்த்தால் மேக்ஸ்வெல்லை எப்படியெல்லாம் கிண்டல் செய்துள்ளார்கள் என்பது உங்களுக்கே புரியும்.
எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. தமிழக உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் மீது புகார் தெரிவித்து அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எழுதியுள்ள கடிதத்தில், “உளவுத்துறையின் நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது. கருத்துரிமை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து புவிசார் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் தொடங்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடுமென்பதால் சர்வதேச சந்தைகளில் நேற்று கச்சா எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது. இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து 35% கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதென கூறப்படுகிறது.
தகுதி இருந்தும் விடுபட்ட மகளிருக்கு அடுத்த 4 அல்லது 5 மாதங்களில், உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் என உதயநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மைதான் எனக் கூறினார். மேலும், விடுபட்டவர்களை கண்டறிந்து, தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்மொழிந்த 3 பேரை தகுதி அடிப்படையில் ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. இதற்கு முன்னதாக MD மற்றும் CEO பொறுப்பு வகித்த கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டாக்ஸி ஓட்டுநரின் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
மோடி மீண்டும் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மை இடத்தில் இருப்பதாக கூறிய அவர், அதிமுக வெகுதூரம் தள்ளி 2ஆவது இடத்தைப் பிடிக்க போராடி வருகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம் என்றார். இந்தியாவின் பொருளாதாரம், மக்களின் அமைதி என மோடி சிதைத்தவைதான் அதிகம் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.