India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடந்தது அனைவருக்கும் அறிந்ததே. அதில், மாவட்ட & மாநில நிர்வாகிகளின் மீது வந்த புகார்கள் குறித்து அவர்களிடமே விரிவாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன நிர்வாகிகளிடம், தேர்தல் முடிவு வெளியானப் பிறகு பலரது பதவிகள் பறிக்கப்படுமென அவர் ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார்.
▶மே – 20 | வைகாசி – 07 | துல்கஃதா -11
▶கிழமை: திங்கள் | ▶திதி: துவாதசி
▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: இரவு 07:30 – 09:00 வரை
▶எமகண்டம்: காலை 10:30 – 12:00 வரை
▶குளிகை: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶சூலம்: கிழக்கு | ▶பரிகாரம்: தயிர்
▶சந்திராஷ்டமம்: சதயம்
தோனி மேலும் ஓராண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நிச்சயமாக இது டோனியின் கடைசி போட்டியாக இருக்காது என்று நம்புகிறேன். கேப்டன்ஷிப் பொறுப்பிற்கு உரிய முதிர்ச்சியை பெற ருத்ராஜுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே தோனி 2025ஆம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் சீசனிலும் விளையாட வேண்டும்” எனக் கூறினார்.
தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்று கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “வடக்கே ஒரு நாள் சம்பளமாக ₹1 லட்சம் தருவார்கள் எனில், தெற்கே மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் தருவார்கள். ஆனால், தென்னக இயக்குநர்கள் அவர்கள் அருகே கூட நம்மை அண்டவிட மாட்டார்கள். அவர்கள் ஈகோ மிக்கவர்கள்” என சாடினார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளின் தொலைதூர பகுதிகளில் வசித்துவரும் 27 கோடி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையச் சேவை கிடைக்கும். சுகாதாரம் & கல்வித் துறைகளில் இணைப்பை மேம்படுத்த அந்நாட்டுடன், மஸ்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
க்ரீன் டீயுடன் ஒப்பிடும்போது கருஞ்சீரகம் ஓமம் டீ 100 மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த கருஞ்சீரகம் டீயை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் சேர்த்து நீரூற்றி 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பு & நச்சுகளை வெளியேற்றும்.
பிரதமர் மோடியின் பாசிச முகம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவரது பயோ பிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், புரட்சிகர எண்ணம் கொண்ட சத்யராஜ் உண்மையில் ஒரு ஹீரோதான். மோடியின் கதையில் சத்யராஜ் நடிக்கலாம். அது அவருடைய தொழில், அதில் எந்த தவறுமில்லை” எனக் கூறினார்.
இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் <
SRH அணியின் இளம்வீரர்களான அபிஷேக் ஷர்மா, நிதிஷ் ரெட்டி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடுவதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். PBKS அணிக்கு எதிரான போட்டியில் SRH வென்றது குறித்து பேசிய அவர், “சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக ஷர்மாவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்க விரும்பவில்லை. வேகப்பந்து & சுழற்பந்து வீச்சாளர்களை அவர் சிறப்பாக எதிர்கொள்கிறார்” எனக் கூறினார்.
➤1498 – போர்ச்சுகீஸ் மாலுமி வாஸ்கோட காமா இந்தியா வந்தடைந்தார். ➤1570 – உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். ➤1845 – தென்னிந்திய சமூக சீர்திருத்த தந்தை அயோத்திதாசர் பிறந்த நாள். ➤1985 – கியூபாவுக்கான வானொலி சேவையை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆரம்பித்தது. ➤2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது.
Sorry, no posts matched your criteria.