News April 14, 2024

முடி உதிர்வை தடுக்கும் நெல்லி தேநீர்

image

மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி தேநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பாத்திரத்தில் நெல்லிச் சாறை ஊற்றி கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்தவுடன் அதில் இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இறக்கி விடவும். குடிக்கும் சூட்டில் அதனை வடிகட்டி தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.

News April 14, 2024

இதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம்

image

2024 மக்களவைத் தேர்தலை I.N.D.I.A கூட்டணிக்கும் என்.டி.ஏ-வுக்கும் இடையில் நடக்கும் போராக தான் பார்ப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஸ்ரீநகரில் பேசிய அவர், “இந்தப் போர் ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல, பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரானது. பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். அதற்கு முடிந்த பங்களிப்பைச் செய்வோம்” என்றார்.

News April 14, 2024

19 ஆண்டுகளில் முதல் முறையாக…

image

முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், 19 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவை பதிவு செய்துள்ளது. 2004 இல் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. ஆட்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத டிசிஎஸ்ஸில் இருந்து 2023-24இல் 13,249 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது டிசிஎஸ்ஸில் 6,01,546 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2024

பிரித்வி மீது கொலைவெறியான ஹர்பஜன் சிங்

image

DC அணியின் நிர்வாகத்தில் தான் இருந்திருந்தால் பிரித்வி ஷாவை நிச்சயம் அடித்திருப்பேன் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ப்ரித்வி ஷா ஷாட்டை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தப் போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

News April 14, 2024

ஏப்ரல் 14 வரலாற்றில் இன்று!

image

*1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். *1699 – கால்சா அறப்படை இயக்கத்தை குரு கோவிந்த் சிங் தோற்றுவித்தார். *1891 – பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த நாள். *1912 – வட அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானது. *1950 – ஆன்மிக குரு ரமண மகரிஷி மறைந்த நாள். *2003 – மனித மரபணுத்தொகை ஆராய்ச்சி திட்டம் நிறைவடைந்தது.

News April 14, 2024

உலகப்போர் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

image

இஸ்ரேல் – ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் அமெரிக்கா உள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.

News April 14, 2024

விஜய் சேதுபதிக்கு அதில் உடன்பாடு இல்லை

image

‘சூது கவ்வும் – 2’ படம் எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒரு விஷயத்தை கிளாசிக்காக செய்துவிட்டோம். அதை நாம் மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாது. சூது கவ்வும் படத்தின் 2ஆவது பாகத்தை எடுப்பதில் கருத்தியலாக அவருக்கு உடன்பாடு இல்லை” எனக் கூறினார்.

News April 14, 2024

5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

image

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 14, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ எண்: 1
▶குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
▶பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) உலகம் அடிப்படையாக கொண்டிருக்கிறது.

News April 14, 2024

தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மாற்றத்தை உருவாக்கும்

image

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக நாட்டில் அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க தேசத்திற்கு வழி்காட்டக்கூடிய வகையில் தமிழக மக்களின் தீர்ப்பு இருக்கும்” என்றார்.

error: Content is protected !!