India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பரப்புரை மேற்கொண்ட அவர், மோடியால் மட்டுமே நாட்டை முழு வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்றதாக மாற்ற முடியும் என்றார். மேலும், காங்., ஆட்சியில் விவசாய பட்ஜெட் ₹22,000 கோடியாக இருந்ததாகவும், ஆனால் 10 ஆண்டுகளில் தங்கள் ஆட்சியில் ₹1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால், பருத்தி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பாண்டில் விளைச்சல் நல்லபடியாக இருக்கும் நிலையில், மழை காரணமாக பருத்தியின் தேவை குறைந்துள்ளது. இதனால் ₹65க்கு விற்பனையான ஒருகிலோ பருத்தி தற்போது, ₹58ஆக குறைந்துள்ளது. வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி இந்தப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் அவ்வணி ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்திருந்தனர். ஆனால், சிஎஸ்கே லீக் சுற்றிலேயே வெளியேறியதால், குவாலிஃபையர் 2 போட்டியின் டிக்கெட்டுகளை சிஎஸ்கே ரசிகர்கள் ப்ளாக் மார்கெட்டில் விற்க முயல்கின்றனர். ஆனால், அவை விலை போகாததால் டிக்கெட் வாங்கியவர்கள் பரிதவிக்கின்றனர்.
நேபாள அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா வெற்றி பெற்றுள்ளார். நேபாள கம்யூ. அரசில் அங்கம் வகித்த ஜனதா சமாஜ்வாதி கட்சி தனது ஆதரவைத் திரும்பப் பெற்றது. இந்நிலையில், மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 158 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். எதிர்க்கட்சியான நேபாள காங்., வாக்கெடுப்பை புறக்கணித்ததால், பிரசண்டா அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தப்பியது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ₹24,500 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. 3 நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனம் கோரியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தோராயமாக 36.73% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பிஹார் – 34.62%, ஜம்மு காஷ்மீர் – 34.79%, ஜார்கண்ட் – 41.89%, லடாக் – 52.02%, மகாராஷ்டிரா – 27.78%, ஒடிஷா – 35.31%, மேற்கு வங்கம் – 48.41%, உ.பி. – 39.55% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சீனா, அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவுகிறது. அண்மையில் சீனாவின் பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போயிங் விமான நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு அந்நாடு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவும், அந்நிறுவன அதிகாரிகள் சீனாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மகன் அர்ஜுனுடன் சென்று வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து நடிகைகள் ஹன்சிகா, தீபிகா படுகோன், ஸ்ரேயா, நக்மா, ஈஷா தியோல், கஜோல், வித்யா பாலன், ரன்வீர் சிங், அனுபம் கெர் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30% பேர் பக்க விளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. இதனை உடனடியாக திரும்பப் பெற ஐசிஎம்ஆர் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கை உண்மைத் தன்மை இல்லாதது என்றும் சரியான தரவுகளைக் கொண்டது இல்லை என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகை யாமி கௌதமிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். கௌரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கும், கடந்த 10ஆம் தேதி அட்சயதிருதியை அன்று அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு ‘வேதவித்’ எனப் பெயர் சூட்டியதாகவும் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.