News April 14, 2024

+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

image

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இப்பணியில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுற்றதால், மாணவர்களின் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நாளை தொடங்க உள்ளது. திட்டமிட்டப்படி மே.6ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.

News April 14, 2024

மீன் சாப்பிடும்போது, மறந்தும் இதை செய்து விடாதீர்கள்

image

தயிரில் வைட்டமின் பி2, பி12, பொட்டாசியம், கால்ஷியம் சத்துக்கள் உள்ளன. மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால் மீன் சாப்பிடுகையில் தயிரை எடுத்து கொள்வது செரிமானத்தை மந்தமடைய செய்யும். இதனால் வயிறு பிரச்னைகள், தோல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆதலால் மறந்தும் மீன் சாப்பிடுகையில் தயிரை எடுக்காதீர்கள்.

News April 14, 2024

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க முதல்வர் அறிவுறுத்தல்

image

அம்பேத்கார் பிறந்தநாளான இன்று (ஏப்.14) சமத்துவ நாளாக திமுக அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாள சின்னமாக விளங்கிய அம்பேத்கர் பிறந்த நாளில் அவரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

News April 14, 2024

வெள்ளிப்பதக்கம் வென்ற ராதிகா

image

U 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 19 வயதான இந்தியாவின் இளம் வீரங்கனை ராதிகா வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் மகளிர் 68 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றில் ராதிகா, ஜப்பானின் நோனோகா ஓசாகியுடன் மோதினார். இதில் 2 – 15 என்ற கணக்கில் அவர் போராடித் தோற்றார். இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அவர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

News April 14, 2024

நடராஜர் நடனம் புரியும் 5 சபைகள்

image

சிவபெருமான் நடராஜராக நடனம் புரியும் 5 சபைகள், தமிழகத்தில் உள்ளன. * ரத்தின சபை (திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கோயில்) * கனக சபை ( சிதம்பரம் கோயில்) * வெள்ளி சபை (மதுரை சுந்தரேஸ்வரர் கோயில்) * தாமிர சபை (நெல்லையப்பர் கோயில்) * சித்திர சபை (குற்றாலம் கோயில்) இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை நிகழ்த்துவதாக ஐதீகம்.

News April 14, 2024

IPL: சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்

image

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 29-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. சொந்த மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் ஆர்வத்துடன் மும்பை அணி தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், MI – 20 போட்டிகளிலும், CSK 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

News April 14, 2024

#மகளிர்உரிமைத்தொகை_ரூ.1000_வரவில்லை

image

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுத்ததை திமுக விளம்பரமாக வெளியிடுகிறது. நாளை அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் ஆயிரம் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தகுதி பார்ப்பதாக கூறி மகளிரை நிராகரித்து திமுக ஏமாற்றுவதாக #வரல_ஆயிரம் என நூதனமான முறையில் அதிமுக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

News April 14, 2024

ஜெகன் மீது கல்வீசியது தெலுங்கு தேசம் கட்சியினர்

image

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தெலுங்கு தேசம் கட்சியினர் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அம்பாதி ராம்பாபு, ஜெகன் மீதான தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

News April 14, 2024

3ஆவது இடத்தை பிடித்தே தீர வேண்டும்

image

மக்களவைத் தேர்தலில் 3ஆவது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக இருக்கிறாராம். வெற்றி, வாக்குச் சதவிகிதம் என்கிற இலக்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இதனை மனதில் வைத்து வேலைகளைச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம். பாஜக 3ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கும் தொகுதிகளில் அவர் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.

News April 14, 2024

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்

image

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இதேபோல் 100க்கும் மேற்பட்ட டிரோன்களையும் ஏவியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு, அவற்றை சுட்டுவீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!