India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வு ரூ.55,000ஐ நெருங்கியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,855க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.89க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,760 உயர்ந்துள்ளது.
அயோத்தியில் குழந்தை ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றதை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் ராமாயண உற்சவ விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராமாயணம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கொண்டாடப்படுகிறது. அதனால், ராமரின் வரலாறை உலகம் முழுவதும் ஆவணப்படுத்துவோம் என பாஜக வாக்குறுதியாகத் தெரிவித்துள்ளது.
சங்கல்ப் பத்திரம் என்பதற்குப் பதில், சங்கட பத்திரம் என்று தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டிருக்க வேண்டுமென காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதோடு, மக்களிடையே பீதி நிலவுகிறது என்றும், இந்த சூழலை ஏற்படுத்தியற்காக மன்னிப்பு பத்திரம், (அ) சங்கடப் பத்திரம் என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என அக்கட்சி கூறியுள்ளது.
தொலைத்தொடர்பு துறை தொடர்பாக பாஜக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடர்ந்து, 6ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். 2 லட்சம் கிராமங்களுக்கு பாரத்நெட் என்ற அதிவேக Broadband இணைய சேவை வழங்கப்படும். அரசு அலுவலகங்களை டிஜிட்டல் மயமாக்குவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இளைஞர்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிலர் முன்கூட்டிய அதிகளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுகளாக மோடி அரசு ஏழைகளுக்கு எதையும் செய்யாதபோது, தற்போதைய வாக்குறுதிகளை நம்புவது சரியல்ல என்றார்.
இந்தியா முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெயில் தொடர்பான மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஐஸ்கட்டி மூலம் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட், பெரிய அளவிலான ஏர் கூலர் என அனைத்து புகைப்படங்களும் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலையொட்டி பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கம், 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன், பொதுசிவில் சட்டம், ₹1க்கு சானிட்டரி நாப்கின், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ₹5 லட்சம் மருத்துவ காப்பீடு, திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு, கிராமங்களில் பைப் லைன் எரிவாயு விநியோகம் உள்ளிட்ட திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கிய வாக்குறுதியாக உள்ளது. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், பாஜகவை ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையை திணிப்பதுதான் இம்முறை எனவும் சாடினார். மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை பாஜக சிதைக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த உடன் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் எனக் கூறிய அவரிடம் வாக்குக்கு பணம் வாங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரசியல் கட்சியினர் 5 ஆண்டுகள் ஆட்சியில் பணத்தை ஆட்டையை போட்டு, மீண்டும் அதை கொடுக்கின்றனர். அதை வாங்கிக் கொண்டு, சரியான நபருக்கு ஓட்டு போட வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.