India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் இன்று ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், தேர்தல் பணிக்காக வெளி மாநிலத்தில் இருப்பதால் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். தேர்தல் செலவுக்காக இப்பணம் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் சிபிசிஐடி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இன்று தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிருத்திவிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘L2 – எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் 2ஆம் பாகமாக இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
கோடை கால மின் தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் ₹2,755 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கியிருக்கிறது. உற்பத்தியை விடவும் அதிக மின் தேவை ஏற்பட்டதால் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக மின்சார ஒழுங்குமுறை வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. தற்போது, வெயில் குறைந்துவிட்டதால் மின் தேவை குறைந்து தமிழகம் சமநிலையை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹54,880க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹6,860க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹99க்கும், கிலோ வெள்ளி ₹2,000 குறைந்து ₹99,900க்கு விற்பனையாகிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 47.4 செல்சியசாக பதிவானது. இது வரலாற்று உச்சமாகும். இதன் தொடர்ச்சியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிவெப்பத்துக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் மழை சக்கைப் போடு போடும் அதே வேளையில் வட மாநிலங்களில் வெயில் தகிக்கிறது. இவை காலநிலை மாற்றத்துக்கான விளைவுகள் என்கிறனர் அறிஞர்கள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த அவர், குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து 14 அப்பாவி உயிர்களும் பலியானது. 40 வயதில் இந்தியாவின் இளம் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, அவரது தாயைப் போலவே படுகொலை செய்யப்பட்டார்.
ஓசூரை சேர்ந்த விவசாயி வெங்கடேஷுக்கு ₹8.75 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என மெசேஜ் வந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதனையடுத்து, இதுவரை தான் அதிகபட்சமாக ₹100 மட்டுமே கட்டணம் செலுத்துவதாக அவர் புகார் அளித்தார். இதுகுறித்து மின்வாரியம், மின் அளவீட்டை கணக்கு எடுத்த அதிகாரியின் மனித தவறால் மின் உபயோகம் 05462 என்பதற்கு பதிலாக 85490 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகர் அஜ்மல் தன்னுடைய பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து உற்சாகம் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய அடுத்தப்பட கேரக்டரும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், அதை விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.
கோடை காலங்களில் வீட்டை குளுமையாக வைக்க அனைவராலும் ஏசி வாங்க முடிவதில்லை. இதற்கு மாறாக, சமயலறை உள்ளிட்ட வெப்பமான அறைகளில் எக்சாஸ்ட் மின் விசிறிகளைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளி நேரடியாக அறைகளுக்கு வராமல் தடுக்க ஜன்னல்களில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம். மொட்டை மாடியில் வெப்பத்தை தணிக்கும் பெயின்ட் அடிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.