News April 14, 2024

பெட்ரோல், டீசல் குறித்து பாஜக சொல்வதென்ன?

image

எரிப்பொருள் உற்பத்தியில் இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் தன்னிறைவு அடையும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிப்போம். எத்தனால் மூலம் எரிப்பொருள்களின் செயல்திறனை அதிகரிப்போம். சார்ஜிங் நிலையங்கள் அமைப்போம் என பாஜக தெரிவித்துள்ளது. இந்தியா, கச்சா எண்ணெய் தேவையில் 85%-ஐ இறக்குமதி செய்யும்போது எரிபொருள் தன்னிறைவு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News April 14, 2024

இஸ்ரேல் – ஈரான் போர்! இந்தியாவின் நிலைப்பாடு?

image

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை நிறுத்தி, அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இஸ்ரேல் – காஸா போரிலும் இதே நிலைப்பாடு கொண்டிருக்கும் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்க மறுத்து நடுநிலை காத்தது குறிப்பிடத்தக்கது. நடுநிலை என்பதே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.

News April 14, 2024

இந்திய முறை திருமணத்திற்கு மோடியின் கேரண்டி

image

இந்திய கலாசாரத்தை பாதுகாக்க பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து திருமணம் நடத்துவதற்கான இடங்களாக மேம்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. திருமணங்களை வெளிநாடுகளில் நடத்துவதை விட்டுவிட்டு இந்தியர்கள் தங்கள் திருமணங்களை இந்தியாவிலேயே நடத்த வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

எங்கள் காதுகள் பாவமில்லையா?

image

எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா? என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ₹10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பாஜக அரசு. மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, சாகர் மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என தமிழக மக்கள் காதில் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு என்று சரமாரியாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News April 14, 2024

காப்பி அடித்து இனி திரைப்படங்கள் எடுக்க முடியாது

image

காப்பி அடித்து இனி படங்கள் எடுக்க முடியாதென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், தற்போது ஓடிடி தளங்களில் அனைத்து படங்களையும் மக்கள் பார்த்து விடுகிறார்கள் என்றும், ஆதலால் முன்பு போல பிற படங்களை காப்பி அடித்து படங்கள் எடுக்க முடியாதென்றும் கூறினார். இதையும் மீறி காப்பி அடித்து படம் எடுத்தால், மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 14, 2024

என்ன நடக்கப்போகிறதோ..?

image

இஸ்ரேல் – காஸா போர், பணவீக்கம், பொருளாதார மந்த நிலை என அச்சத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தை, தற்போது வேகமாக உயர்ந்து தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடித்துள்ளது முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இன்று விடுமுறை என்பதால், நாளை சந்தை தொடங்கும்போது என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் முதலீட்டளர்கள் இருக்கின்றனர்.

News April 14, 2024

புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ராஜஸ்தான்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றுள்ளது. KKR 2வது, CSK 3வது, LSG 4வது இடங்களில் உள்ளன. SRH, GT தலா 6 புள்ளிகளுடன் 5&6வது இடங்களிலும் உள்ளன. MI, DC&PBKS அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. RCB ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

News April 14, 2024

சித்தாந்தம் இல்லாத கூட்டணி I.N.D.I.A கூட்டணி

image

நாகையில் பரப்புரை மேற்கொண்ட சீமான், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாத கூட்டணி I.N.D.I.A கூட்டணிதான் என்று விமர்சித்துள்ளார். கேரளாவுக்குள் எதிர்க்கட்சிகள் ( காங்., கம்யூ.), கேரளாவுக்கு வெளியே கூட்டணி, இதுதான் I.N.D.I.A கூட்டணியா என்றும் காவிரியில் தண்ணீர் தரமுடியாது என்று சொன்ன கட்சியுடன் திமுக கூட்டணி வைக்கிறது; அப்போ விவசாயிகள் முக்கியம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

News April 14, 2024

BREAKING: தென் தமிழகத்தில் இன்று மழை

image

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News April 14, 2024

ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

image

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை சுட்டிக்காட்டி, ஈரானில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமைதி காக்கும்படியும், பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. 2 அவசர கால எண்களை அறிவித்த இந்தியத் தூதரகம், ஈரானிலுள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!