India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
தனது திருமணம் பாரம்பரிய முறைப்படிதான் நடைபெறும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலில் எனது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். காஞ்சி பட்டுடுத்தி, மல்லிகைப் பூ வைக்க எனக்கு ஆசை. மணமகனும் வேஷ்டி சட்டையில்தான் இருக்க வேண்டும். திருமணத்திற்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படும் எனக் கூறியுள்ளார்.
3.50 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஸ்டாலின் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 10 லட்சம் அரசு வேலை என மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று முதல்வர் Xஇல் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பிரதமர் அளித்த வாக்குறுதி கடந்த 18 மாதங்களில் நிறைவேற்றப்பட்டது கூட தெரியாமல் முதல்வர் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு எனக் கூறியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த Pang Dong Lai என்ற நிறுவனம், ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்து கொள்வதற்காக இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்கள் நிம்மதியாக பணியாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமென இந்தியர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை தொடுக்கும் முன் தரவுகளை படிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் வலியுறுத்தியுள்ளார். பாஜக அளிக்கும் துண்டுச்சீட்டை சத்தமாக படிப்பதில் எந்த பயனும் இல்லை. மற்றவர்களை இந்து விரோதிகளாக சித்தரிப்பது பாஜகவின் வெற்றிக்கு உதவாது. ஏனெனில், அவர்களை விட நாங்கள் பெரிய இந்துக்கள் என தெரிவித்தார்.
தேர்தலுக்கு பின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 நிறுத்தப்படும் என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், “திமுக அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டது., தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டது. அதுபோல ₹1000 திட்டத்தையும் நிறுத்திவிடுவார்கள்” என்றார்.
கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள KKR அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் LSG அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், LSG 4ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
பகுதி நேர வேலை பார்ப்போர், பின்வரும் 2 ஆலோசனைகளை கடைபிடித்தால், முழுநேர வேலை பார்ப்போர் போல தனிநபர் கடனை எளிதில் பெற முடியும். *கிரெட்டிட் ஸ்கோர் 750 புள்ளிகளுக்கும் அதிகமாக இருக்கும்படி பார்த்து கொண்டால், தனிநபர் கடன் வழங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்வரும் *வருமானம் ஈட்டக்கூடிய குடும்ப உறுப்பினர் ஒருவரை கூட்டு சேர்த்து விண்ணப்பித்தால் தனிநபர் கடன் கிடைக்கும்.
ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ‘தலைவர் 171’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்.22ல் வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே, படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசனும் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மேலாளர் சதீஷிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாஜக நிர்வாகி கோவர்த்தனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.