India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வான்கடே மைதானத்தில் அதிரடியாக ஆடிவரும் CSK வீரர் ஷிவம் தூபே அரை சதம் அடித்துள்ளார். மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்த அவர், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 50* ரன்கள் அடித்துள்ளார். ருதுராஜ் 69 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 15.1 ஓவர்கள் முடிவில் 150/2 ரன்கள் எடுத்துள்ளது. இன்று சிஎஸ்கே எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 10 வயது சிறுவன் முத்துராமலிங்கம் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சிறுவன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது தண்ணீர் பம்பில் இருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவரும் இவர் 33 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். மேலும், 57 போட்டிகளில் விளையாடி 2,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் குறைவான போட்டிகளில் விளையாடி 2,000 ரன்களைக் கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது CSK 13 ஓவரில் 110/2 ரன்கள் எடுத்துள்ளது.
முகத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். இதற்காக இளைஞர்கள் பலர் ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கின் ஃபேர்னஸ் க்ரீம்களின் பயன்பாடு இந்தியாவில் சிறுநீரக பிரச்னைகளை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆய்வில், சில ஃபேர்னஸ் க்ரீம்களில் சேர்க்கப்படும் மெர்க்குரி, சிறுநீரகத்தை செயலிழக்க வைப்பதாக கூறப்படுகிறது.
சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபில் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரஹானே ஆட்டமிழந்தபோது மும்பை அணியின் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அப்போது பதிவான சத்தத்தின் அளவு 131Db என பதிவாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இதுதான் அதிகப்படியான சத்தமாகும். முன்னதாக சென்னை மைதானத்தில் 130 Db பதிவானதே சாதனையாக இருந்தது.
ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமிழந்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சாதி வாரிக் கணக்கெடுப்பு கருத்தில் கொள்ள வேண்டியது எனினும், சிறந்த கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மூலம் பின்தங்கியோருக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் எனவும், காங்கிரஸ் தனது அமைப்பு ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
லக்னோ பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப், கொல்கத்தா அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். தன்னுடைய முதல் ஓவரிலேயே 10 பந்துகளை (0, L1, 4, 2, b1, nb, Wd, Wd4, nb, 6) வீசினார். இதன் மூலம், ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியின் முதல் ஓவரை மிக நீண்ட ஓவராக வீசிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார். இன்றைய போட்டியில் 4 ஓவரை வீசிய அவர் 47 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உதவிகள் தேவைப்பட்டால், அவர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவிகளுக்கு +972-547520711, +972-543278392 ஆகிய எண்களையும், cons1.telaviv@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம்.
பிரபல இயக்குநர் அல்போன்சோ குரோனுடனான சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அல்போன்சோ குரோன் ஒரு மெக்சிகன் இயக்குநர் ஆவார். இவர் 5 ஆஸ்கர், 7 பாஃப்டா, 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர். கமல் பகிர்ந்த புகைப்படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், சித்தார்த், அதிதி ராவ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.