India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 தேர்தலில், முன்னாள் ராணுவ தளபதியும், எம்பியுமான வி.கே. சிங்கிற்கு மீண்டும் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. மேனகா காந்தி மகன் வருண் காந்திக்கும் அக்கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் அவர்களின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். காஜியாபாத்தில் வி.கே. சிங்கிற்கு பதிலாக அதுல் குமார் கார்க் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு ராஜபுத்திர சமூகத்தினரின் மகாபஞ்சாயத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதி எம்பியான பிரிஜேந்திர சிங் அதிருப்தியால், பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேந்தர் சிங்கும் காங்கிரசில் சேர்ந்தார். ஜாட் சமூகத்தினரான பிரேந்தர் சிங், மத்தியில் மோடி தலைமையில் முதல் அரசு அமைந்தபோது காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர். மேலும் இவர், ஜாட் சமூகத் தலைவர் சோட்டு ராமின் பேரனும் ஆவார்.
நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மறைவிற்கு இபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி மீதும், கட்சி தலைமை மீதும் விசுவாசம் கொண்டு, கட்சி கொள்கைகளை பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தவர் அருள்மணி. அவரது மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு. அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 2 தீவிரவாதிகளும், கொல்கத்தா லாட்ஜில் சென்னைக்கு செல்வதாக கூறி தங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்கத்தா லாட்ஜில் தீவிரவாதிகள் அப்துல், முசாவீர் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், குண்டுவெடிப்பு நடந்து 12 நாள்கள் கழித்து, அங்கு வந்ததும், டார்ஜிலிங்கில் இருந்து வருவதாகவும், சென்னைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறி தங்கியதும் தெரிய வந்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே.எல்.ராகுல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். CSK, KKR, MI அணிகளுக்கு எதிரான போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்காத அவர், அணிக்கு திரும்பிய உடன் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியே எனக்குத் தெரியாது. அது முடிந்த பிறகு, வாடிவாசல் பட வேலைகள் இருக்கிறது. அதன் பிறகு தான், அடுத்து எந்தப் படம் என்பது எனக்குத் தெரியும். அதனால், ‘வடசென்னை 2’ எடுப்பேனா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறினார்.
ஆறு, குளம் போன்ற நீர்த்தடங்களில் காணப்படும் கொக்கு, கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் உட்கொள்வதில்லை. தனக்கு பிடித்த மீன் தண்ணீரில் வெளிப்படும் வரை பொறுமையாக காத்திருக்கும். அந்த மீன் வெளிப்பட்டதும் குறிவைத்து கொத்தி பிடித்து உட்கொள்ளும். மனிதர்களும் இதுபோல வாய்ப்புக்காக காத்திருந்து, அது கிடைத்ததும் சிறிதும் தாமதிக்காது பயன்படுத்த வேண்டும். இதுவே வாழ்வியல் வெற்றிக்கான ரகசியமாகும்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மீண்டும் அவர்களுக்கு ஜூன் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை வேலை நாட்களாக இருக்கும்.
அதிமுக ஊழல் கட்சி என சொல்வதற்கு அமித்ஷாவுக்கு தற்போது ஞானோதயம் வந்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர். வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம் எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. திமுக தலைமையிலான INDIA கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சோழ மற்றும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. இங்கிருக்கும் இறைவன் வடாரண்யேஸ்வரர், அம்பாள் வண்டார்குழலி என்று வணங்கப்படுகின்றனர். காரைக்கால் அம்மையாருக்கு, நடராஜராக சிவபெருமான் காட்சி தந்த ஸ்தலம் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம். இங்கு மனமுருகி வழிபட்டால், திருமணத் தடை, சனிக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.