India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மீண்டும் அவர்களுக்கு ஜூன் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை வேலை நாட்களாக இருக்கும்.
அதிமுக ஊழல் கட்சி என சொல்வதற்கு அமித்ஷாவுக்கு தற்போது ஞானோதயம் வந்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர். வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம் எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. திமுக தலைமையிலான INDIA கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சோழ மற்றும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. இங்கிருக்கும் இறைவன் வடாரண்யேஸ்வரர், அம்பாள் வண்டார்குழலி என்று வணங்கப்படுகின்றனர். காரைக்கால் அம்மையாருக்கு, நடராஜராக சிவபெருமான் காட்சி தந்த ஸ்தலம் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம். இங்கு மனமுருகி வழிபட்டால், திருமணத் தடை, சனிக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரசாத் முருகன் இயக்கத்தில், பரத் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time In Madras) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. ஹைப்பர் லிங்க் கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், ராஜஸ்தான் 15 ஆட்டத்திலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ‘Abki baar 400-paar’, என்ற பாஜகவின் முழக்கம் குறித்து பேசிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என்பதால் தான், உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருவதாக சாடினார். மேலும், I.N.D.I.A கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமைகளை திமுகவும், காங்கிரஸும் விற்றுவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கச்சத்தீவு உரிமை பறிபோனது, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும் என்று கூறினார். கச்சத்தீவில் மீனவர் உரிமையை திமுக, காங்கிரஸ் விற்றதை அம்பலப்படுத்தவே ஆர்டிஐ தகவலை பாஜக வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாற்றி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும். இல்லறத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்.19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்கு பின் விசாரணைக்கு வரும் எனவும் தெரிகிறது. குறிப்பாக, கோடநாடு வழக்கு ஏப்.22, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் +2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே.7ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.ssc.gov.in என்ற தளத்தில் அறியலாம்.
Sorry, no posts matched your criteria.