India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்ரல் – 13 | பங்குனி – 31
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM,
4:30 PM – 5:30 PM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 AM,
9:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:30 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶ திதி – பஞ்சமி
டெல்லி அணிக்காக 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 9 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2,570 ரன்களை எடுத்து இப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் 2,382, சேவாக் 2,375 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தியாவுக்கு இனிமேல் மோடி வேண்டாம் என கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். தருமபுரி திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் தருகின்ற வரியை மத்திய அரசு முழுமையாக திருப்பித் தருவதில்லை. ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டுமே அவர்கள் திருப்பித் தரும் போதும் தமிழக முதல்வர் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், பாஜகவை வீழ்த்துவதே நமது இலக்கு என்றும் கூறினார்.
➤ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும், நெருக்கமான உறவும் அறிவார்ந்த மனிதனுக்கு வேறு இல்லை.
➤ நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
➤சில வேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
➤கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
உ.பி-யில் INDIA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்றவும், எதேச்சதிகார அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய அவர், தங்களின் ஆதரவை அவரிடம் தெரிவித்தார். உபி-யில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
நம்பிக்கை துரோகத்திற்கு மிக சிறந்த உதாரணம் இபிஎஸ் என முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தெரிவித்துள்ளார். அரசியலில் அவரை வளர்த்துவிட்ட யாரையும் இபிஎஸ் அதிமுகவில் வைத்துக்கொண்டதே கிடையாது. இதற்கு மிக சமீபத்திய உதாரணம் சசிகலா. குறுக்கு வழியில் மட்டுமே அதிமுகவில் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், தான் அதிமுகவை விட்டு வெளியேறுவதற்கு இபிஎஸ் தான் முக்கிய காரணம் என்றார்.
➤1919 – ஜலியான்வாலா பாக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலி
➤1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
➤1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
➤1976 – பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள். பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சில சமயம் பெரிய பாதிப்பை கூட எற்படுத்தும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
லக்னோ அணியுடனான நேற்றைய போட்டியில் டெல்லி அணி வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதைப் போலவே 9ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம் : கடவுள் வாழ்த்து
◾குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
◾விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
Sorry, no posts matched your criteria.