India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ‘அக்னிவீர் திட்டம்’ குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகேந்திரகர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அக்னிவீர் திட்டம் இந்திய ராணுவத்தின் திட்டமில்லை. அந்த திட்டம் தேவையும் இல்லை. நம் நாட்டின் இளைஞர்களின் மரபணுவில் தேசப்பற்றுள்ளது. அவர்களை பாஜக தொழிலாளர்களாக மாற்றிவிட்டது. அவர்களுக்கு உரிய மரியாதை செய்து தர வேண்டும்” எனக் கூறினார்.
இன்று (மே 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நடிகை மனிஷா கொய்ராலா லண்டனில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், “இங்கிலாந்து – நேபாள நட்புறவு ஒப்பந்தத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட அழைக்கப்பட்டது ஒரு மரியாதை. இந்தியாவைப் பற்றி அவர் கொண்டுள்ள மரியாதை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. எவரெஸ்ட் மலையேற்றம் ஏற்றத்திற்கு வருமாறு அழைத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயை விட மோசமான நோய்கள் INDIA கூட்டணியிடம் இருக்கின்றன என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். லக்னோவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய, “INDIA கூட்டணி கட்சிகளிடம் வகுப்புவாதம், இனவாதம் & வாரிசு அரசியல் போன்ற நோய்கள் உள்ளன. இந்நோய்கள் பரவினால், ஒட்டுமொத்த நாடும் அழிந்துவிடும். வகுப்புவாதம், இனவெறி, குடும்பத்திற்கு அதிகாரமளிக்கும் வெறி அவர்களிடம் உள்ளன” என்றார்.
*பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – சீமான்
*பிரதமராவதற்கு தகுதியானவர்கள் இந்தியா கூட்டணியில் இல்லை – அமித்ஷா
*இந்தியாவில் அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த வேண்டும் – அமெரிக்கா
*RCB-க்கு எதிரான Eliminator போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RR அணி வென்றது.
*மார்ச் காலாண்டில் சிட்டி யூனியன் வங்கி ₹255 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இன்று (மே 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நாங்களும் உணவு ஏற்பாடு செய்ய தயார் என அண்ணாமலைக்கு தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். ஜூன் 4க்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், எத்தனை பேர் இருப்பர் என்று சொன்னால் உணவு ஏற்பாடு செய்வோம் என்றார். முன்னதாக, பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் தேதியை கூறினால், போராட்டத்திற்கு வரும் 10 காங்கிரஸாருக்கு உணவு வழங்குவதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
மோடியின் தனி நபர் குறித்த கருத்தை முதல்வர் ஸ்டாலின் தமிழர்களுக்கு எதிராக திரிப்பதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். ஒடிஷா அரசாங்கத்தை மறைமுகமாக ஆட்சி செய்யும் ஒரு நபரை பற்றி பிரதமர் பேசியதை தவறு என்று யாரும் கூற முடியாது என்றார். பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழகத்தில் உள்ளதாக மோடி தெரிவித்த பரப்புரையில் கூறிய நிலையில், அதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய RR அணி 174 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதையடுத்து மே 24ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியை RR அணி எதிர்கொள்ள உள்ளது.
உலகில் மொத்தமாக 9 லட்சம் தீவுகள் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 1,382 தீவுகள் உள்ளன. அவற்றில் சில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். இதே போல உலகின் பல நாடுகளில் தீவு கூட்டங்கள் உள்ளன. அதிக தீவுகளைக் கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சுவீடன் இருக்கிறது. இந்த நாட்டில் 2,67,570 தீவுகள் உள்ளது. இதில் 96 ஆயிரம் தீவுக்கு மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது. 80 ஆயிரம் தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.