India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகள் மற்றும் 11 பந்துகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுக்கு எதிராக 160+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை டெல்லி அணி பெற்றுள்ளது.
நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சின்ட்வாராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிரானது அல்ல என்றும், ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது மக்களிடையே பிளவை ஏற்படுத்தத்தான் என்றும் விமர்சித்தார்.
நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள ராதிகா நடிகை ராதிகா கடந்த 10 நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஜீப்பில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், குறுகலான இடங்களில் தனது கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். இருவரையும் கண்ட பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.
கோவையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் நேற்றிரவு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது சாதாரண தேர்தல் அல்ல, சிந்தாந்த யுத்தம். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போரில் திமுக – காங். கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று பெருமிதம் தெரிவித்தார்.
மோடி 3ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்பது 101 சதவீதம் உறுதி என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக அரசு நம்பர் ஒன் அரசு எனப் பெருமைப்பட்டு வருகிறது. போதையிலும், கஞ்சா விற்பனையிலும்
தான் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மக்கள் நலனில் தமிழகம் கடைசியில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
➤ ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை – முதல்வர் ஸ்டாலின்
➤ மக்களவைத் தேர்தல் ஒரு சிந்தாந்த போர் – ராகுல் காந்தி
➤ தஞ்சையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புரை
➤ ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் தடுத்தது – மோடி
➤ மே 16 அன்று வெளியாகும் ‘மகாராஜா’ திரைப்படம்
➤ தமிழக வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி
சிவசேனா கட்சி மோடியின் கல்லூரி பட்டத்தை போல போலி அல்ல என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது. பரப்புரைக்காக மும்பை வந்த பிரதமர், உத்தவ் அணியின் சிவசேனாவை போலி என விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, யார் போலி என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தெரிய வரும் என்று பதிலளித்துள்ளார்..
தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மறைப்பதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டூல் குற்றம் சாட்டியுள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் முதல் ஓவரை வீசி தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹர்திக் தற்போது அதிகம் பவுலிங் செய்வதில்லை. அவர் உடல்நலன் சரியான முறையில் இல்லை என்று கூறிய சைமன் டூல், பாண்டியாவின் நடவடிக்கைகளில் அது வெளிப்படையாக தெரிவதாகவும் கூறினார்.
தமிழகத்தின் வரி பணத்தை, வட மாநிலங்களுக்கு மோடி தருவதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்கள் ரூ.1 வரியாக செலுத்தினால் திருப்பி பல மடங்காக அவர்களுக்கு கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டுக்கு மட்டும் வெறும் 29 பைசா தருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜகவின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழக மக்கள் தக்க பாடம் வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
இரவு உணவுக்குப் பிறகு காலை வரை வயிறு வெறுமையாக இருப்பதால், வயிற்றுக்குள் ஆசிட் சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். சரிவர சாப்பிடாமல் விட்டால், அது அல்சர் பிரச்னையை உருவாக்கும். 40 வயதுக்கு மேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. மேலும், சூடான உணவை சாப்பிட்ட நொடியே, குளிர்ச்சியான உணவுக்கு மாறினால் பல் பாதிப்பும் ஏற்படும்.
Sorry, no posts matched your criteria.