News May 23, 2024

போராடி காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

image

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றில், பி.வி.சிந்து போராடி வெற்றி பெற்றார். தென்கொரிய வீராங்கனை சிங் யூ ஜின் உடனான இப்போட்டியில், அபாரமாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து. 2ஆவது செட்டில் தோல்வி அடைந்ததால், இருவரும் 1-1 என்ற செட் கணக்கில் சமனில் இருந்தனர். 3ஆவது செட்டில் கடும் போட்டி நிலவிய நிலையில், 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

News May 23, 2024

மீண்டும் பாஜக ஆட்சியே: நிர்மலா சீதாராமன்

image

பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி முன்னெடுத்த முயற்சிகளைப் பார்த்து பாஜகவைத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், மக்களுடைய எண்ணங்கள் சரியாக இருப்பதை அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதன் மூலமே அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

News May 23, 2024

5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

image

தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்கு மேல் குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு இன்று மாலைக்கு பின் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 23, 2024

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்பு விண்ணப்பப் பதிவு?

image

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 16இல் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், 16 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. 9,050 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20க்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளது. இதற்கு, tnmedicalselection.net/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

News May 23, 2024

வி.கே. பாண்டியன் பிடியில் நவீன் பட்நாயக்?

image

வி.கே. பாண்டியன் அருகில் இருப்பதை நவீன் பட்நாயக் விரும்புகிறாரா அல்லது அவரை வி.கே. பாண்டியன் தனது பிடியில் வைத்துள்ளாரா? என அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா கேள்வியெழுப்பியுள்ளார். முதல்வர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு இருந்தால், நாட்டுக்கு நல்லதல்ல என்றும், ஆதலால் நவீன் பட்நாயக்கிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசி, அவர் மகிழ்ச்சியாக உள்ளாரா, இல்லையா என்ற உண்மையைக் கேட்க வேண்டும் என்றார்.

News May 23, 2024

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருடன் தனுஷ்

image

தமிழகத்தில் கொடைக்காணலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாகத் தமிழ் படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதும், தனுஷ் அதில் நடிக்க உள்ளதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News May 23, 2024

கனமழைக்கு 7 நாளில் 15 பேர் பலி

image

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 7 நாள்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை உள்பட 4,385.40 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மழையால் சேதமடைந்த வீடுகள், பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது.

News May 23, 2024

அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர் கெஜ்ரிவால்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். மேலும், ஹசாரேவை ஏமாற்றியவரால், மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், வாக்குறுதிகள் எதையும் ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை. INDIA கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் B-Team ஆக ஆம் ஆத்மி செயல்படுகிறது என்றும் சாடினார்.

News May 23, 2024

எங்கள் சுய மரியாதைக்காக விளையாடினோம்

image

இந்த ஐபிஎல் சீசனில் RCB கம்பேக் கொடுத்ததும், தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற விதமும், எப்போதும் மனதில் பசுமையான நினைவுகளாக இருக்கும் என RCB வீரர் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடியதாகவும், அதன் பின் தங்கள் சுய மரியாதைக்காக விளையாடினோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால்? (3/3)

image

1945இல் 2ஆம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலில் 2.26 லட்சம் பேர் மாண்டதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்தத் தாக்குதலின் தீவிரம் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆதலால், இன்னொரு பேரழிவை மனித குலம் தாங்குமா? என சிந்தித்து, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்பதே உலக நாடுகளின் வேண்டுகோளாகும்.

error: Content is protected !!