India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆசிய வாலிபால் சேலஞ்ச் கோப்பை தொடரின் 2ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸில் ஆசிய வாலிபால் சேலஞ்ச் கோப்பை தொடர் நடந்து வருகிறது. அதன் 2ஆவது போட்டியில், 46ஆவது இடத்திலுள்ள சீன தைபே அணியுடன் இந்திய அணி (62) மோதியது. அதில், இந்திய அணி 3-0 (25-19, 25-13, 25-16) என்ற செட் கணக்கில் வென்று 3ஆவது லீக் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம் அடங்கிய படிவம் 17சி-ஐ பொதுவில் வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ECI தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “வலைதளத்தில் வெளியிட்டால், 17சி படிவத்தை போன்ற போலி பிரதிகளை வஞ்சக நோக்கம் கொண்டவர்கள் உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது மக்கள் இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ‘கல்கி 2898 ஏடி’ புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கமல் சார் படத்தில் பயன்படுத்திய உடைகள் மாதிரியே எனக்கும் உடைகள் வாங்கித் தர வேண்டும் என்று என் பெற்றோரிடம் அடம் பிடித்திருக்கிறேன். அவருடன் நடித்தத் தருணங்களை என் வாழ்வின் பெருமையான தருணங்களாக மனதில் வைத்துக் கொள்வேன்” என்றார்.
INDIA கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இந்தியாவை விட தங்கள் வாக்கு வங்கிதான் முக்கியம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிவானியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “நான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளியாக இருப்பேன். இது அரசியல் பேச்சு அல்ல, எனது வாக்குறுதி. நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது” எனக் கூறினார்.
நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ரூஸ்வெல்ட் ஓட்டல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் பாகிஸ்தானில் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி வருகிறது.
*மோடி இன்னும் சில நாள்களில் முன்னாள் பிரதமராக மாறி விடுவார் – மம்தா பானர்ஜி
*இந்துத்துவாவின் முகமாக அம்மையார் ஜெயலலிதா இருந்தார் – அண்ணாமலை
*மருந்து & மருத்துவப் பொருள்கள் ஏற்றுமதியில் உலகில் அளவில் இந்தியா 2ஆவது இடம் பிடித்துள்ளது.
*ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
*நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டம்
இன்று (மே 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
எம்.பி தேர்தலில் போட்டியிடும் 121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என ADR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 359 பேர் 5ஆம் வகுப்பு வரையிலும், 647 வேட்பாளர்கள் 8ஆம் வகுப்பும், 1303 பேர் 12ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1,502 பேர் பட்ட படிப்பை முடித்துள்ளனர். மிகவும் சொற்பமாக, 198 வேட்பாளர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பெற்றுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிறுமியை வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாக பேசி துன்புறுத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைதானார். இந்நிலையில், இளைஞரின் குடும்பம் நல்ல பின்னணியில் இருப்பதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட இளைஞருக்கு ம.பி. உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜரான மாணவரின் தந்தை, தங்கள் மகன் செய்ததை நினைத்து வெட்கப்படுவதாக கூறி மன்னிப்பு கேட்டார்.
Sorry, no posts matched your criteria.