News May 24, 2024

10 மாவட்டங்களில் இன்று கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்கு மேல் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதே நேரம், வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்வதால், இன்று முதல் மே 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை (3 டிகிரி செல்சியஸ் வரை) படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 24, 2024

இந்திய அளவில் டிரெண்டிங்கில் நடிகர் விஜய் முதலிடம்

image

நடிகர் விஜய்யின் பிறந்தநாளிற்கு இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்கள் X பக்கத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். வரும் ஜூன் 22ஆம் தேதி 50ஆவது பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து, #VIJAYBdayFestin1Month எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. அன்று GOAT படத்தின் அப்டேட் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News May 24, 2024

தவறு செய்திருந்தால் பாஜகவில் இணைந்திருப்பேன்: கெஜ்ரிவால்

image

குற்றச்சாட்டுக்கு பயந்து முதல்வர் பதவியை ராஜினமா செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பணம் வாங்கிக் கொண்டு எந்த தவறையும் தான் செய்யவில்லை என்று கூறிய அவர், ஒருவேளை தவறு செய்திருந்தால் பாஜகவுக்கு சென்று தவறுகளை மறைத்திருக்கலாமே என்றார். எங்கெல்லாம் பாஜக தோற்கிறதோ அங்கெல்லாம் மாநில முதல்வர்களை பாஜக கைது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 24, 2024

DK கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்ததே இல்லை

image

தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்ததில்லை என அவரது மனைவி தீபிகா கண்ணீர் மல்க கூறினார். போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள். வீட்டில் 2, 3 நாள்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயிற்சியைத் தொடங்கி விடுவார். நானும் ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால், அவரிடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் கிரிக்கெட்டை விட்டிருப்பேன்” எனத் தெரிவித்தார்.

News May 24, 2024

சகோதரர்கள் தினம் எப்படி வந்தது?

image

ஆண்டுதோறும் மே 24ஆம் தேதி உலக சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த சி.டேனியல் ரோட்ஸ் தான், முதல்முதலாக சகோதரர்கள் தினத்தை உருவாக்கினார். இது சகோதரர்களுக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், சிறப்பாக்கவும் உதவும். சகோதரர், சகோதரிகளைக் கடந்து, உங்கள் நண்பர்களுக்கும் சகோதரர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்பை வெளிப்படுத்துங்கள்.

News May 24, 2024

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை செய்ய உத்தரவு

image

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் பாடம் நடத்த ஏதுவாக இருக்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News May 24, 2024

பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்

image

துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பிஎஸ்சி நர்சிங். பி.பார்ம் உள்ளிட்ட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org-இல் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

News May 24, 2024

OnThisDay: 2ஆவது முறையாகக் கோப்பையை வென்ற MI

image

2015ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை அணி 2ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த MI அணி, அடுத்த 10 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்று அதிரடியான கம்பேக்கை கொடுத்தது. இறுதிப்போட்டியில், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணியை, தங்களது அசாதாரண பந்துவீச்சால் 161 ரன்களுக்குள் சுருட்டி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News May 24, 2024

மக்களிடம் ஆசிர்வாதம் கேட்கும் பிரதமர் மோடி

image

சுயநலக்காரர்கள், சந்தர்ப்பவாதிகளால் கட்டமைக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். வகுப்புவாதம், ஜாதி பெருமை, குடும்ப நலன் பேசுபவர்களாக இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியத் தாயை அவமதிக்கும் செயலை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்கிறது என விமர்சித்த அவர், வலுவான இந்தியாவை கட்டமைக்க மக்களின் ஆசிர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார்.

News May 24, 2024

பசியோடு இருக்கும் போது கோபம் வருவது ஏன்?

image

பசியோடு இருப்போருக்கு கோபம் அதிகம் வருவதை பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசியோடு இருக்கையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், ஹார்மோன் அட்ரிலின், கார்டிசோல் சுரந்து அதை சரி செய்யும், அப்போது எரிச்சல் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை அளவு குறைகையில் மூளை நியூரோபெப்டைட் ஒய் ரசாயனத்தை சுரப்பதாலும் கோபம் வருவதாக தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!