India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில், சம்மன் வந்தால் பதிலளிப்பேன் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், சில நாள்களுக்கு முன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இறப்பதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தில் சிலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக கேரளாவின் தடுப்பணை கட்டும் முடிவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் கானாவைச் சேர்ந்த ஏஸ் லியாம் நானா சாம் அன்க்ரா என்ற சிறுவன் இளம் ஓவியர் என்ற உலக கின்னர் சாதனை படைத்து அசத்தியுள்ளார். ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ள அவர், 9 ஓவியங்களை கண்காட்சியில் விற்றுள்ளார். ஓவியம் மீதான ஏஸ் லியாமின் ஆர்வத்தை 6 மாத குழந்தையாக இருந்தபோதே கண்டறிந்ததாக, அவரது தயார் தெரிவித்துள்ளார். ஏஸ் லியாமின் தற்போதைய வயது ஒரு வருடம் 152 நாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பாஜகவின் ஏஜென்ட் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். சமீப காலமாக பாஜகவிற்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவிப்பது குறித்து பேசிய அவர், தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோருக்கு பாஜக நிதியளிப்பதாக குற்றம் சாட்டினார். அடுத்தடுத்த கட்ட தேர்தலில் பாஜக தோற்று வருவதால், பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
10, +2 பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகர் விஜய் தலா ₹5000 பரிசு வழங்க உள்ளார். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் கூறும்போது, மாணவர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும், ஜூன் மாதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 10, +2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகர் விஜய் ₹5000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், காவல்துறையினர் இடையிலான மோதல் போக்கை தடுத்து நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் கடிதம் எழுதியுள்ளது. அரசுப் பேருந்தில் சென்ற காவலரிடம் டிக்கெட் எடுக்குமாறு நடத்துனர் வலியுறுத்திய நிகழ்வு பூதாகரமானது. இதனால், விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள், தங்கள் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அச்சத்தில் கிர்கிஸ்தானை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
ஜூன் 4ஆம் தேதி இந்தியாவில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார். எத்தனை தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வெல்லும் என்று தற்போது கூற முடியாது என்ற அவர், கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை வீசி வருவதாக தெரிவித்தார். பாஜக வேட்பாளர்கள் தங்களின் உற்சாகத்தை இழந்துள்ளதாகவும், அது தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 12, திரிபாதி 32 ரன்களிலும், மார்க்ரம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்துவீசிய போல்ட் 3 விக்கெட்டுகளையும் தூக்கினார். பொறுமையாக ஆடிவரும் டிராவில் ஹெட் 16*, க்ளாஸன் 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
பாஜக 400 இடங்களை பெற வாய்ப்பு இல்லை என கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெல்லும் என பாஜக அமைச்சர் கூறுவதாக தெரிவித்த அவர், கடந்த 2019இல் அங்கு 1 தொகுதியில் வென்ற காங்கிரஸ், அதிக மாநிலங்களில் வென்றால் பாஜக எப்படி 400 தொகுதிகளை பெறும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் நிச்சயம் வெல்லும் எனவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.