India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்றுவிடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பரப்புரை செய்யும் ஸ்டாலின், என்னை பற்றியே பேசுகிறார். தன் ஆட்சியில் ஏதாவது செய்திருந்தால் தானே, அவரால் அதைப்பற்றி பேச முடியும் என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர் உதயநிதி விரக்தியின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவின் வெற்றியை திமுகவால் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரின் வலது கையாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் தெரிவித்துள்ளார். அரசியலிலும், சினிமாவிலும் மூத்தவராக இருந்தவர். தான் கொண்ட கொள்கையில் கடைசி வரை விலகாமல் பயணித்து மறைந்திருக்கிறார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று கூறிய அவர், சினிமாவில் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ சென்னையில் பிரதமர் மோடி வாகனப் பேரணி
➤ கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் இல்லை – டெல்லி உயர்நீதிமன்றம்
➤திமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை – இபிஎஸ்
➤ தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பே இல்லை – முதல்வர் ஸ்டாலின்
➤ நடிகர் அமீர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
➤ டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் விளையாட வாய்ப்பு
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த காங்., எம்பி திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அவர், அரசியல் உலகில் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத நேர்மையான மனிதர். மூத்த அரசியல்வாதியான அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அவர், அந்தத் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அதற்காக, தண்டேஸ்வரநல்லூரில் உள்ள நிர்வாகி ஒருவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்த நிலையில், அங்கு ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றனர்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள மா.பொ.சி. படத்தை எடுப்பதற்கு முன்பு அனுமதி வாங்க வேண்டாமா என மா.பொ.சியின் பேத்தி பரமேசுவரி கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய பெயரில் படத்தின் தலைப்பை வைத்துவிட்டு அது அவருடைய கதை இல்லை எனக் கூறுவதற்கு வெட்கமாக இல்லையா என கடுமையாக விளாசிய அவர், தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி எனத் தனக்கு தோன்றுவதாக கூறியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. சஷாங்க் சிங் 46, அசுதோஷ் சர்மா சர்மா 33 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய நிலையிலும், வெற்றி இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை.
தேவர் மகன், சின்ன கவுண்டர் படங்கள் வெளியான போது சாதிய படம் என்ற கேள்வி எழாதது ஏன் என பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற PK ரோஸி திரைப்பட விழாவில் பேசிய அவர், “1990 காலக்கட்டத்தில் தமிழ் சினிமா மொத்தமாக மாறியிருந்தது. ஏராளமான சாதியப் படங்கள் வெளியாகின. சாதிகளை வெளிப்படையாக பேசிய படங்கள் வந்தன. அவை விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டதா?” போன்ற கேள்விகளை முன்வைத்தார்.
தமிழ் கலாசாரத்திற்கு பாஜக என்றும் மரியாதை அளிக்கிறது என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு NDA கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த நகரத்திற்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.