News April 9, 2024

குபேரனாகப் போகும் ராசிகள்

image

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகங்கள், ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி அடையும்போது சில ராசிகளுக்கு நன்மை, தீமைகள் ஏற்படும். அந்த வகையில் தற்போது நவ கிரகங்களில் ஏற்பட்டுள்ள பெயர்ச்சியால் சிம்மம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினருக்கு குபேர யோகம் காத்திருக்கிறது. இவர்கள் தொட்டதெல்லம் இனி பொன்னாகும். ஒரு மடங்கு முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் கொழிக்கும். பண வரவு தேவைக்கும் அதிகமாக கொட்டும்.

News April 9, 2024

தமிழ்நாடு என்ன சரணாலயமா?

image

வாக்கு கேட்டு மட்டும் வந்து செல்ல தமிழ்நாடு என்ன சரணாலயமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று வாகனப் பேரணி சென்றார். அதனை சுட்டிக்காட்டிய முதல்வர், தேர்தலின்போது மட்டும் சந்திக்க தமிழக மக்கள் என்ன 2ஆம் தர குடிமக்களா? என வினவினார். மேலும், சமூக நீதி மீது அக்கறையுள்ள பிரதமரையே மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

News April 9, 2024

தாய்க்காக சாய் பாபா கோயில் கட்டிய நடிகர் விஜய்

image

தாய் ஷோபனாவுக்காக நடிகர் விஜய், சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாய் பாபா கோயிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று வைரலானது. அந்தக் கோயில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில், நடிகர் விஜய் கட்டியது எனத் தெரியவந்துள்ளது. ஷோபா தீவிர சாய் பாபா பக்தை என்பதால், அவரது ஆசைக்காக 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்தக் கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார்.

News April 9, 2024

அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணம் ஆகாத ஆண்கள்/பெண்கள் ஏப்.22ஆம் தேதிக்குள் <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை ஏப்.22ஆம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை க்ளிக் செய்யுங்க.

News April 9, 2024

பிரதமர் மோடியின் நாளைய திட்டம்

image

இன்று இரவு சென்னை ராஜ் பவனில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு வேலூருக்கு புறப்படுகிறார். 10.30 மணியளவில் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் மோடி, 1.45 மணிக்கு மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 3 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து நாக்பூர் புறப்படுகிறார்.

News April 9, 2024

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்

image

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத் (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் 10ஆவது நபராக மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வந்த அர்பாத் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

News April 9, 2024

டி20 உலகக் கோப்பை அணியில் ரிஷப் பந்த்?

image

கார் விபத்தில் படுகாயம் அடைந்து ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரிஷப் பந்த், தற்போது ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துவரும் அவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், டி20 WCக்கான இந்திய அணியில் அவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக Cricbuzz தெரிவித்துள்ளது. அவர் அணிக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.

News April 9, 2024

துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

image

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என இபிஎஸ் பேசியுள்ளார். தேனியில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அவர், முல்லை பெரியாறு அணை உரிமையை திமுக கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக சட்டப்போராட்டம் நடத்தியது என்றார். மேலும், I.N.D.I.A கூட்டணி என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக விமர்சித்துள்ளார்.

News April 9, 2024

தக்காளி விலை தாறுமாறாக எகிறுகிறது

image

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால், தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த சூழலில், அது தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது. சில மாதங்களாக கிலோ ₹10, ₹20 என விற்பனையான தக்காளி தற்போது ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயருமோ என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் உள்ளனர்.

News April 9, 2024

450 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

image

தமிழ்நாடு, உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்பட 21 மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 102 தொகுதிகளுக்கான தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 450 வேட்பாளர்கள் (28%) கோடீஸ்வரர்கள் என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 252 வேட்பாளர்கள் (16%) மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!