News April 10, 2024

‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்கிறது தமிழகம்

image

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியுள்ளதால்
‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என மக்கள் முழக்கம் எழுப்புவதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். வேலூரில் பேசிய அவர், 2014க்கு முன்பு மிகவும் பலவீனமான நாடாக இந்தியாவை உலக நாடுகள் கருதியதாகவும், ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வளமான இந்தியாவிற்கு பாஜக அடித்தளமிட்டுள்ளதாகவும் கூறினார். வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்தும் நேரம் இது என அவர் தெரிவித்தார்.

News April 10, 2024

இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு

image

முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 54 மண்டலங்களுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், முந்திரி பருப்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் 2ஆவது, பழங்கள் – காய்கறி ஏற்றுமதியில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

News April 10, 2024

டாஸ்மாக் வசூல் எங்கே செல்கிறது?

image

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினசரி வசூலாகும் தொகையை தேர்தல் செலவுக்காக திமுக பயன்படுத்துவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுக நிர்வாகிகள் மூலம் டாஸ்மாக் பணத்தை தேர்தலுக்கு செலவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், டாஸ்மாக் கடைகளில் தினசரி வசூலாகும் பணம் குறித்து தேர்தல் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

News April 10, 2024

ED சில ஆவணங்களை எடுத்துச் சென்றது

image

சோதனையின்போது அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இது குறித்து மதுரையில் நடந்த சிறப்பு தொழுகைக்கு பின் பேசிய அவர், அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். ஆனால், என்ன எடுத்தார்கள் என அவர்கள்தான் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

News April 10, 2024

விவாகரத்தான பெண்களுக்கு இந்த உரிமை கிடையாது

image

விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தாெடுக்க முடியாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர், விவாகரத்தான 6 மாதத்துக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News April 10, 2024

மகள் நாதக வேட்பாளர், அம்மா திமுகவுக்கு பிரசாரம்

image

பாஜகவில் இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி, அக்கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில், நாதக கிருஷ்ணகிரி வேட்பாளராக வித்யாராணி அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது தாய் முத்துலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் உள்ளார். அக்கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால் மகளுக்கு ஆதரவு கேட்காமல், திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

News April 10, 2024

IPL: சொந்த மண்ணில் அதிக முறை வென்ற அணிகள்

image

▶மும்பை – 80 போட்டிகளில் 49இல் வெற்றி
▶சென்னை – 67 போட்டிகளில் 48இல் வெற்றி
▶கொல்கத்தா – 82 போட்டிகளில் 48இல் வெற்றி
▶பெங்களூரு – 87 போட்டிகளில் 40இல் வெற்றி
▶ராஜஸ்தான் – 55 போட்டிகளில் 36இல் வெற்றி
▶டெல்லி – 77 போட்டிகளில் 32இல் வெற்றி
▶ஹைதராபாத் – 53 போட்டிகளில் 32இல் வெற்றி
▶பஞ்சாப் – 61 போட்டிகளில் 31இல் வெற்றி

News April 10, 2024

எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார்

image

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அவர், அமலாக்கத்துறை விசாரணை நேர்மையாக நடப்பதாகவும், அழுத்தம் காரணமாக விசாரணை நடக்கிறதா? என்பது தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இறைவன் மிகப்பெரியவன் என்றும், தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

News April 10, 2024

அதிமுகவினரை கத்தியால் குத்திய திமுகவினர்

image

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையின் போது, சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று கத்திக்குத்து அளவிற்கு சென்றுள்ளது. திருச்சி, லால்குடியில் கட்சிக்கொடி கட்டிய பிரச்னையில் அதிமுக நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்னை வருமோ என்று அச்சப்படும் அளவிற்கு இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.

News April 10, 2024

10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

image

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

error: Content is protected !!