India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 14,259 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 254 வேட்பாளர்கள் நேரடி வாக்குப்பதிவு மூலமும், 46 உறுப்பினர்கள் கட்சி ஆதரவுடனும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இருமுனைப் போட்டியில் உள்ளன.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ திரைப்படம், வரும் 19ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம், கடந்த பிப்.16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் OTT-இல் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஹேம மாலினியை விமர்சித்த விவகாரத்தில் கார்கே, சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் (ECI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூட்டத்தில் பேசுகையில் ஹேம மாலினியை சுர்ஜேவாலா ஆபாசமாக விமர்சித்ததாக பாஜக புகார் அளித்தது. இதையடுத்து சுர்ஜேவாலுக்கு, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டும், இதுபோல காங்கிரசார் பேசாமல் இருப்பதை உறுதி செய்யும்படி கார்கேவுக்கும் ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிர்வாக திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு சென்றுவிட்டதாகவும், அதனை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் பத்திரம் மூலம் எங்கிருந்து, எவ்வளவு பணம் பெற்றார்கள் என அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜடேஜா, தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற தோனியின் சாதனையை ஜடேஜா சமன் செய்தார். இருவரும் தலா 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.
தமிழ்நாட்டு பெண்கள் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிகிறது. சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக, கலாசார காரணங்களுக்காக சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் 50 ஆண்டுகால ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். வேலூரில் பேசிய அவர், திமுக சார்பில் போட்டியிட குடும்ப பின்னணி, ஊழல், தமிழ் கலாசாரத்திற்கு எதிரான மனநிலை ஆகிய 3 தகுதிகள் தேவை என்றும், திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் குறிக்கோளே பிரித்தாளும் சூழ்ச்சிதான் என அவர் சாடினார்.
திருமணத்தை ரகசியமாக வைக்க நினைத்ததில்லை என நடிகை டாப்சி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “என் திருமணம் குறித்து தெரிவிப்பதற்கு, மனதளவில் தயாராக இல்லை. என் சகோதரி தான் திருமண ஏற்பாட்டை செய்தார். திருமணம் பற்றி எந்த கோரிக்கையையும் அவரிடம் கூறவில்லை. அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். திருமணத்திற்கு குறைவானவர்களே வந்ததால், எந்த விதமான அழுத்தமும் ஏற்படவில்லை” எனக் கூறினார்.
எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்ஜிஆர் மாத சம்பளம் கொடுத்து வந்தார். பிறகு எம்ஜிஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன். அதில் எம்ஜிஆரை வைத்து தெய்வத்தாய், இதயக்கனி உள்பட 6 வெற்றிப் படங்களை இயக்கினார். இதனால் சில சமயங்களில் ஆர்.எம்.வீரப்பனை எம்ஜிஆர், “சொல்லுங்க முதலாளி” என ஜாலியாக கிண்டல் செய்வது உண்டு.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் நாட்டிலேயே அதிமுக 2வது இடத்தில் உள்ளது. கமல்நாத் மகன் நகுல்நாத் (₹717 கோடி), அதிமுகவின் அசோக் குமார் (₹662 கோடி), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தேவநாதன் (₹304 கோடி) முதல் 3 இடங்களில் உள்ளனர். ஏ.சி. சண்முகம் (₹152 கோடி), அதிமுக ஜெயபிரகாஷ் (₹135 கோடி) 6, 7ஆவது இடம், கார்த்தி சிதம்பரம் (₹96 கோடி ) 10ஆவது இடம் வகிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.