News May 25, 2024

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற இருவர் கைது

image

IPL இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை, கள்ளச் சந்தையில் விற்பனை செய்த இருவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் KKR-SRH அணிகள் மோதுகின்றன. அதற்கான டிக்கெட்டுகளை தாஹா அலி, ராஜ் திலக் ஆகியோர் கள்ளத்தனமாக விற்றுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், 18 டிக்கெட்டுகள், ₹42000ஐ பறிமுதல் செய்தனர். கள்ளச் சந்தையில் டிக்கெட் வாங்கி ஏமாறாதீர்.

News May 25, 2024

ஜெயலலிதா ஒரு தீவிர இந்துவாகத்தான் வாழ்ந்தார்

image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல கோயில்களில் குடமுழுக்கு நடத்தி, புனரமைப்பு செய்து தீவிர இந்துவாக வாழ்ந்ததாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். முன்னதாக, ஜெயலலிதா சிறந்த இந்துத்துவா தலைவராக இருந்ததாகவும், அவரது மறைவுக்கு பின்னர் அந்த இடத்தை பாஜக நிரப்பி வருவதாகவும் கூறி அண்ணாமலை பரபரப்பை கிளப்பியிருந்தார். மீண்டும் அதே கருத்தை எல்.முருகனும் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News May 25, 2024

முழு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

image

நாடு முழுவதும் இதுவரை 6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் முடிந்துள்ளது. இந்த நிலையில், 5 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளின் முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகளின் எண்ணிகை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, வாக்குப் பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

News May 25, 2024

ட்ரெண்டிங்கில் காவ்யா மாறன்

image

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி நாளை விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், X ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார். நேற்று இரவு முதலே ஹைதராபாத், கொல்கத்தா அணிகளை மையப்படுத்தி செய்திகள் வைரலாக தொடங்கிய நிலையில், தற்போது காவ்யாவும் இணைந்துள்ளார். வெற்றியை மிகுந்த ஆரவாரமாக கொண்டாடும் காவ்யாவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா?

News May 25, 2024

துடைப்பத்துக்கு வாக்கு செலுத்திய சோனியா குடும்பம்

image

டெல்லியில் காங்., ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், ராகுல், சோனியா காந்தி வசிக்கும் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் போட்டியிடுகிறார். இதனால், சோனியா குடும்பத்தினர் முதல்முறையாக ஆம் ஆத்மியின் துடைப்பம் சின்னத்திற்கு வாக்களித்தனர். இதேபோல், கெஜ்ரிவால் வசிக்கும் தொகுதியில் காங்., வேட்பாளர் போட்டியிடுவதால், அவரும் காங்., சின்னத்திற்கு வாக்களித்தார்.

News May 25, 2024

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News May 25, 2024

ஓய்வு வேண்டுமா? உழைப்பு வேண்டுமா? : அமித் ஷா கேள்வி

image

விடுமுறைக்கு சிம்லா சென்ற ராகுல், இதுவரை ராமர் கோயிலுக்கு செல்லவில்லை என அமித் ஷா விமர்சித்துள்ளார். இந்த தேர்தல், 6 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறை எடுக்கும் ராகுலுக்கும், 23 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் தீபாவளியை ராணுவத்தினருடன் கொண்டாடும் மோடிக்கும் இடையேயானது என்ற அவர், இந்த தேர்தலில் ராகுலுக்கு 40 இடம் கூட கிடைக்காது என்றார். ராகுல், வாக்கு வங்கிக்காக ராமரை புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார்.

News May 25, 2024

நெட்ஃபிளிக்ஸில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய படங்கள்

image

2023ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவைச் சேர்ந்த தொடர்கள், திரைப்படங்கள் Netflix-இல் 100 கோடி பார்வைகளை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சந்தாதாரர்கள் Netflix-ஐ 9000 கோடி மணி நேரம் (90 billion) பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ‘ஜானே ஜான்’ (20.2M) முதலிடத்திலும், ‘ஜவான்’ (16.2M) 2ஆவது இடத்திலும் உள்ளன.

News May 25, 2024

IPL கோப்பையுடன் KKR – SRH கேப்டன்கள்

image

ஐபிஎல் கோப்பையுடன் KKR – SRH அணி கேப்டன்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் இருப்பது போன்ற போட்டோ ஷூட் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. இதில், படகில் கோப்பைக்கு இடையே அவர்கள் அமர்ந்திருப்பது போலவும், ஆட்டோவில் அமர்ந்திருப்பது போலவும் எடுத்த புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News May 25, 2024

காஷ்மீரில் விரைவில் தேர்தல்: ராஜீவ் குமார்

image

ஜம்மு & காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்த அவர், காஷ்மீர் மக்களே அவர்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்றார். காஷ்மீரில் 2018 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை அது புதுபிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!