News April 10, 2024

எஸ்ஐபி திட்டங்களில் குவிந்த ரூ.19,270 கோடி

image

எஸ்ஐபி (SIP) முதலீட்டு திட்டங்களில் கடந்த மார்ச்சில் மட்டும் இந்தியர்கள் ரூ.19,270 கோடியை முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச்சில் 42 லட்சத்து 87 ஆயிரத்து 117 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எஸ்ஐபி திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சராசரி சொத்துக்களின் மதிப்பு ரூ.10,71,665.63 கோடியாக அதிகரித்துள்ளது.

News April 10, 2024

வீடு தேடி பணம் தரும் ஆதார் ஏடிஎம் சேவை அறிவோமா?

image

அவசரத் தேவைக்கு பணம் தேவை. அதே நேரம், வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் இருப்போருக்கு ஆன்லைன் ஆதார் ஏடிஎம் சேவையை இந்திய அஞ்சலக வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த சேவையை பெற ஆதாருடன் உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் போதும். அஞ்சலக ஊழியர் வீட்டுக்கே வந்து பணத்தை கொடுத்து விடுவார். மேலும் டெபாசிட், பேலன்ஸ் சேவையையும் பெறலாம். அதிகபட்சமாக ரூ.10,000 பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

News April 10, 2024

சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்

image

அதிமுக, பாமக, அமமுக ஆகிய எதிர்க்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் சரமாரியாக சாடியிருக்கிறார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் அவர், “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று பேசிய டிடிவி தினகரன்தான் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்” என்றார். சிஏஏ சட்டத்தை ஆதரித்து துரோகம் செய்த கட்சிகள்தான் அதிமுகவும் பாமகவும் என்று முதல்வர் ஆக்ரோஷமாக பேசினார்.

News April 10, 2024

8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும்

image

ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் 8 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து அணிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றன. தற்போதைய விதிகளின்படி 4 வீரர்கள் மற்றும் RTM அடிப்படையில் ஒருவர் என 5 பேரை தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த விதி அணியின் வீரர்களை சிதறிப் போகச் செய்வதாகவும் 8 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

News April 10, 2024

நவம்பரில் ED ரெய்டு, ஏப்ரலில் ராஜினாமா

image

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இன்று மாலை ராஜினாமா செய்தார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெய்டுக்கு பயந்து அவர் பாஜக பக்கம் சாய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

News April 10, 2024

இன்றே ரம்ஜான் கொண்டாட்டம். நாளை விடுமுறை உண்டா?

image

நேற்று பிறை தெரியவில்லை என்று தமிழக காஜி அறிவித்ததால் அரசு ஏப்ரல் 11ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்தது. ஆனால், இரவு 10 மணியளவில் பிறை தென்பட்டதால் தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் இன்றே ரம்ஜான் பெருநாளை கொண்டாடிவிட்டனர். இதனால் நாளை விடுமுறை உண்டா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் எந்த குழப்பமும் இல்லை என்றும், காஜி சொன்னதுபோல நாளை (ஏப்ரல் 11) விடுமுறை தினம் என்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

News April 10, 2024

ராஜஸ்தான் அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் இன்று RR-GT அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற RR, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 5 போட்டிகளில் விளையாடி 2இல் மட்டுமே வென்ற GT, புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் யார் வெல்லுவாங்கன்னு சொல்லுங்க?

News April 10, 2024

சந்தேஷ்காலி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க ஆணை

image

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான், அவரது ஆதரவாளர்கள், சந்தேஷ்காலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களை வன்கொடுமை செய்ததாகவும், அவர்களது நிலங்களை அபகரித்ததாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார்.

News April 10, 2024

இந்தியர்களுக்கு நாடோடி விசா வழங்கும் நாடுகள்!

image

வெளிநாடுகளில் தங்கி பணிபுரிவோருக்கு ஏற்ற டிஜிட்டல் நாடோடி விசாவை (Digital Nomad Visa) பல நாடுகள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் வழங்குகின்றன. இந்தியர்களுக்கு ஓராண்டு வரை தங்கி பணிபுரிய இந்தோனேசியா (150 டாலர்), மொரிஷியஸ் (கட்டணமில்லை), போர்ச்சுக்கல் (90 யூரோ), ஜெர்மனி(75 யூரோ), கிரீஸ் (75 யூரோ), பஹாமாஸ் (25 டாலர்), ஸ்பெயின் (73.26 யூரோ), செஷல்ஸ் (10 யூரோ) கட்டணத்தில் இந்த விசாவை வழங்குகின்றன.

News April 10, 2024

கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா?

image

இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்க்க காங்கிரஸும், திமுகவுமே காரணமென வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா என கேட்க விரும்புகிறேன்” என கூறியிருந்தார். இந்தப் பேச்சு, தேசம் முக்கியமில்லையென்ற காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துவதாக பாஜக விமர்சித்துள்ளது.

error: Content is protected !!