News April 10, 2024

குஜராத் அணிக்கு 197 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற GT பந்துவீச்சை தேர்வு செய்ததால், RR அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 24, பட்லர் 8, சாம்சன் 68, பராக் 76, ஹெட்மயர் 13 ரன்கள் எடுத்தனர். இதனால் RR அணி 196/3 ரன்களை குவித்தது. GT தரப்பில் உமேஷ், ரஷித், மோஹித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

News April 10, 2024

ஏப்ரல் 20ஆம் தேதி கில்லி ரீ ரிலீஸ்

image

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம், ஏப்ரல் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 2004 ஏப்.17ஆம் தேதி வெளியான இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக, முத்துப்பாண்டி கதாபாத்திரத்தின் ‘செல்லம்’ வசனம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த நிலையில், படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தமிழகம் முழுவதும் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

News April 10, 2024

I.N.D.I.A 400 இடங்களுக்கு மேல் வெல்லும்

image

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News April 10, 2024

ஒரே பந்தில் RR அணிக்கு 5 ரன்கள்

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் GT வீரர் நூர் முகமது வீசிய 9ஆவது ஓவரை எதிர்கொண்ட சஞ்சு, பேக்வேர்டு பாயிண்ட்டில் ஒரு ரன் அடித்தார். அப்போது பந்தை பிடித்த ஃபீல்டர், அதை பவுலர் ஸ்டம்பை நோக்கி வீச, எதிர் திசையில் இருந்த மோஹித் ஷர்மா அந்தப் பந்தை பிடிக்காததால் அது பவுண்டரிக்கு சென்றது. இதன் மூலம் RR அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது.

News April 10, 2024

மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை!

image

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து திருநங்கை மஹாமண்டலேஷ்வர் ஹிமாங்கி போட்டியிடுவாரென அகில பாரத இந்து மகாசபா (ABHM) அறிவித்துள்ளது. குஜராத்தின் பரோடாவில் பிறந்த இவர், மும்பைக்கு இடம்பெயர்ந்த பின்னர் இஸ்கான் அமைப்பில் சேர்ந்தார். ராம கதா உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை மேடையில் ஹிமாங்கி அரங்கேற்றி உள்ளார். இந்தியாவில் 48,044 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2024

காய்கறி விலை உயருகிறது

image

வெயிலின் தாக்கம் அதிகமாவதன் காரணமாக காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ₹50 உயர்ந்து ₹90க்கு (கோயம்பேடு சந்தை நிலவரம்) விற்பனை ஆனது. எலுமிச்சை கிலோ ₹80, பீட்ரூட் கிலோ ₹30, கத்திரிக்காய் கிலோ ₹30, கேரட் கிலோ ₹35, இஞ்சி கிலோ ₹110, உருளை கிழங்கு கிலோ ₹24, அவரைக்காய் கிலோ ₹40 என்று விற்பனை ஆகிறது.

News April 10, 2024

50 ரன்களை கடந்த ரியான் பராக்

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 50 ரன்களை கடந்தார். டாஸ் வென்ற GT முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய RR அணி தற்போது வரை 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரியான் பராக் 35 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 55 ரன்களை விளாசியுள்ளார். இந்தப் போட்டியை எந்த அணி வெல்லும்.?

News April 10, 2024

மோடியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி புகார்

image

பிரதமர் மோடியின் புகைப்படத்தை கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால், அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமோகாவில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், தன்னை பாஜக வேட்பாளர் போல காட்டிக்கொள்ள, பிரதமர் மோடியின் புகைப்படங்களை அவர் தவறாக பயன்படுத்தி வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.

News April 10, 2024

ட்ரெண்டான ரவி சாஸ்திரி

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ‘ஐ ஆம் ஹாட்டி’, ‘ஐ ஆம் நாட்டி’, ‘ஐ ஆம் சிக்ஸ்டி’ என்ற கேப்சனுடன் ஹாயாக போஸ் கொடுத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் அவரை கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

News April 10, 2024

கராச்சியில் குவிந்த 4 லட்சம் பிச்சைக்காரர்கள்!

image

கராச்சியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் குவிந்ததால், பாகிஸ்தான் போலீசார் திணறி வருகின்றனர். ரமலான் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தானில் பல்வேறு பகுதியில் இருந்து யாசகம் பெறுவதற்காக அங்கு பிச்சைக்காரர்கள் குவிந்துள்ளனர். இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் பலரும் கூட்டத்தில் ஊடுருவியதால் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போலீசார் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!