India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பாஜகவை வளர விட மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூட மோடி இத்தனை முறை சென்றதில்லை. ஆனால், தமிழ்நாட்டுக்கு பிரதமர், இத்தனை முறை வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆதரவு தெரிவிப்பதும் திமுகவின் பாணி என்றார். ரோடு ஷோ நடத்தும் மோடி மக்களிடம் பேசுவாரா? என்றும் அவர் வினவினார்.
எலான் மஸ்க் விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரரும், X வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற ஏப்ரல் 22இல் இந்தியா வர உள்ளார். இந்த வருகையின் போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் – 11 | பங்குனி – 29
▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM,
▶கெளரி நேரம்: 12:30 PM – 01:30PM,
6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம்
▶ திதி – திரிதியை
தோல்வி பற்றி விளக்கமளிக்க கடினமாக இருப்பதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய அவர், “எந்த ஒரு அணியின் கேப்டனுக்குமே ஏன் தோல்வி அடைந்தோம், எந்த இடத்தில் வெற்றியை தவறவிட்டோம் என்று கூறுவதற்கு சங்கடமாக இருக்கும். அதே போன்ற ஒரு மன நிலையில் தான் இருக்கிறேன்” என அவர் வேதனை தெரிவித்தார். முன்னதாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி வெற்றியை நழுவ விட்டது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவே, பயங்கரவாதம் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய காங்கிரசால் முடியவில்லை. பயங்கரவாதத்தின் மூலத்தை அடியோடு அழித்து, 370வது பிரிவை பிரதமர் மோடி நீக்கியதாக கூறிய அவர், அதனால் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நம்மை கண்டு பயந்து நடுங்குவதாகவும் தெரிவித்தார்.
மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் வைட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்போர்ட். அதே போல பப்பாளிப் பழம் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிக நல்லது.
➤ ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
➤ எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
➤ எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
➤ எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
➤ ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
தேர்தலுக்கு பின் அதிமுகவில் மாற்றம் வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் போட்டியிடும் தினகரன் 50% வாக்குகளை பெற்று வெல்வார் என்ற அவர், ஓபிஎஸ் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று எனத் தெரிவித்தார். சுயேச்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் வெற்றி பெற்ற பின்பு தென் மாவட்ட மக்கள் அவர் பின்னால் அணி திரளுவார்கள். தேர்தல் முடிவில் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
➤1829 – கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது
➤1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
➤1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
➤1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
➤1970 – அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.
➤2012 – இந்தோனேசியாவில் சுமத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக நேற்றை ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அசைக்க முடியாத அணியாக இருந்த ராஜஸ்தான், தனது முதல் தோல்வியை இந்த தொடரில் பெற்றுள்ளது. ஆனாலும், அந்த அணி 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.