India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்த பணிகளை 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை 80 முறை காங்கிரஸ் உடைத்து உள்ளதாகவும், இதுபெரிய பாவம் என்றும் விமர்சித்தார். சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் உயர்வானவர் இல்லை, தகுதியே ஒருவரை உயர்வானராக்குகிறது என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
பிட் புல் உள்ளிட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனைக்கு பிறகு, புதிதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பெங்களூரு-மும்பை இடையேயான 25ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா? என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பையுடன் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் கடந்த 2014, 2019 தேர்தல்களைப் போல், இந்த முறை பாஜக க்ளீன் ஸ்வீப் அடிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மோடி – அமித்ஷாவின் சோந்த ஊர் மற்றும் பாஜக கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் NDA : 21-23, INDIA: 3-5, ராஜஸ்தானில் NDA: 17 -19, INDIA: 6 -8 இடங்களில் வெற்றி பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
தேர்தலில் வென்று இபிஎஸ் என்ன பிரதமராக போகிறாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக திமுகவுடன் இபிஎஸ் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர், எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அதிமுக வெற்றிபெறாது என்றார். மேலும், என் பெயரை கூட சரியாக கூற வராத அவர், என்னை பச்சோந்தி என்று கூறுவது வெட்கக்கேடானது என்றும் விமர்சித்தார்.
தேர்தல் பத்திர சர்ச்சையில் சிக்கிய லாட்டரி கிங் மார்ட்டினுக்கு எதிரான ED வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே தனக்கு எதிராக CBI பதிவு செய்த வழக்கு விசாரணை முடியும் வரை, ED விசாரிக்கக் கூடாதென உத்தரவிடக்கோரி மார்ட்டின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ED விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்து, மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். அனைவருக்கும் உதவி செய்யும் இந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தை குலதேவதை என்றும் அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும். ஆறு பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும் என்பது ஐதீகம்.
➤ தேர்தலுக்கு பின் அதிமுக காணாமல் போகும் – அண்ணாமலை
➤ டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா
➤ ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதை
➤ அதிமுகவை சீண்டிப் பார்க்க வேண்டாம் – வைகை செல்வன்
➤ ‘ஜோக்கர் 2’ படத்தின் டிரைலர் வெளியானது
➤ முதலிடத்தில் நீடிக்கும் தமிழக வீரர் குகேஷ்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி, தங்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசு என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன் அணி களத்தில் இருக்கும் வரை போட்டி முடிந்துவிட்டதாக எந்த தருணத்திலும் யாரும் நினைத்துவிட கூடாது. இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வோம் என்பதை அணி வீரர்கள் நிரூபித்துள்ளார்கள் என்ற அவர், அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து வெல்வோம் என்றார்.
Sorry, no posts matched your criteria.