India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய X பதிவில், “டெல்லி மருத்துவமனை தீ விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்த இக்கட்டான சூழலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தை எண்ணி வருந்துகிறேன். காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சியில் அளிக்கப்பட்டது போல 100 யூனிட் விலையில்லா மின்சாரம், ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தாதோரின் மின் இணைப்பை துண்டிக்கும் முன்பு அவர்களுக்கு தகவல் தெரிவித்து, கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு இதே நாளில், CSK-வை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில், 148/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 60*(32) ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோனி 63*(45) அதிரடியாக விளையாடியும் இலக்கை எட்ட முடியாததால், 23 ரன்கள் வித்தியாசத்தில் CSK தோல்வி அடைந்தது.
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். இதில், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர், இளநிலை & முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், மசால்ஜி உள்ளிட்ட 2,311 பணிகள் நிரப்பப்படவுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் <
கனடா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை ரா அமைப்பு மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு நிராகரித்து விட்டது. அதேநேரத்தில், தேர்தல் பிரசாரத்தில் பேசும் பிரதமர் மோடி தனது தலைமையிலான புதிய இந்தியா, நாட்டின் எதிரிகளை அவர்கள் இடத்திற்கே தேடிச் சென்று கொல்லும் என பேசி வருகிறார். இதைவைத்து பார்க்கும்போது, நாட்டின் எதிரிகளை ரா அமைப்பு உண்மையில் வேட்டையாடுகிறதோ என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுவோரை இந்திய உளவாளிகள் கொலை செய்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ குற்றம்சாட்டி வருகிறார். இதேபோல், தங்கள் நாட்டிலும் கொலை முயற்சி நடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஐநா பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியும், தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் சிலரை அடுத்தடுத்து தேடிப்பிடித்து இந்திய உளவுத்துறை கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், உலகம் முழுவதும் உள்ள உளவாளிகளைக் கொண்டு பிற நாடுகளிலுள்ள தனது எதிரிகளை களையெடுப்பதாக கூறப்படுவதுண்டு. முனிச் தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன தீவிரவாதிகள் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கொல்லப்பட்டது உள்ளிட்டவை இதற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று தற்போது இந்தியாவின் “ரா” உளவு அமைப்பும் மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளியின் வரத்து அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் கிலோ ₹40க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ₹60க்கு விற்கப்படுகிறது. அதேபோல, காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மழையின் தீவிரம் குறைந்தாலும் பல பயிர்கள் அழிந்துவிட்டதால், காய்கறிகளின் விலை குறைய நாளாகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமியின் அமரன் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். சூர்யாவின் ‘புறநானூறு’ படம் தொடங்குவதற்கு தாமதமாவதால், அதற்கிடையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு ஆக்ஷன் படம் இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
KKR-SRH இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், KKR வீரர் சுனில் நரைன் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர், இன்று அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.