India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சிவகங்கையில் நாளை மேற்கொள்ள இருந்த சாலைப் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் தேவநாதனை ஆதரித்து நாளை அமித் ஷா சாலைப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பேரணி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால், அரசியலில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி விலகியுள்ளார். கடந்த தேர்தலில் சிக்கபள்ளாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இம்முறையும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த மொய்லி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொ.ம.தே.க.வின் நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன் அதிமுகவிடம் தனது வெற்றியைப் பறிகொடுக்க வாய்ப்பிருப்பதாக திமுக தலைமைக்கு உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட் அளித்துள்ளதாம். எதிர்க்கட்சிகளை விட மாதேஸ்வரனின் சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக அதிகளவில் பரப்புரை செய்கிறார்களாம். இதன் பின்னணியில், சூரியமூர்த்தியின் உள்ளடி வேலைகள் (முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தெலுங்கில் பேசி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சந்திரகிரிபுரம், சீனியாபுரம் ஆகிய பகுதிகளில் மொழிச் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் உள்ளனர். மக்களை கவரும் வகையில் பேசிய அவர், “மத்தியில் 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் மோடி. தமிழக மக்களும் அவரது வெற்றியில் பயன்பெற வேண்டும்” எனத் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 72(44) ரன்கள் குவித்தார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக 3,000 ரன்களை கடந்த 4ஆவது வீரர் மற்றும் முதல் இளம்வீரர் என்ற பெருமைகளை பெற்றார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடியை நோக்கி கேள்வி கேட்டு தன்னை முன்னிலைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று எல்.முருகன் விமர்சித்துள்ளார். பிரதமர் மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட் கூட மிஞ்சாது; படுதோல்வி அடையும் எனக் கூறிய அவர், மெட்ரோ திட்ட மதிப்பீடு குறித்த ஆய்வு பணி முடிந்தபின் விரைவாக நிதி அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
வெயில் காலத்தில் ஏற்படும் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் ரோஜாப்பூவுக்கு உண்டு. மேனியை மின்ன வைக்கும் ரோஸ் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். பன்னீர் ரோஜா இதழ்கள், முந்திரி, ஏலக்காய், இளம் தேங்காய் துண்டுகள், தேன் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிக்கட்டி சாறாக எடுத்து, அதில் நட்ஸ் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் வெள்ளிச் செங்கோலை அளித்தது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அண்மையில், பிரசாரத்துக்காக கடலூருக்கு வந்த முதல்வரை தனது சொந்த விருப்பத்தின் பேரில் தருமபுரம் ஆதீனம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 40 தொகுதியிலும் வெற்றிபெற வாழ்த்தியிருக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவின்போது, மோடியிடம் செங்கோல் தமிழக ஆதினங்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டிராபிக் சிக்னல், வீடுகள், கடைகளில் யாசகம் கேட்க திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவின்கீழ், இந்தத் தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. இதை மீறும் திருநங்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள காவல்துறை, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டுள்ளது.
RR-GT இடையேயான ஐபிஎல் போட்டியில், மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசும் அணி 20 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால், நேற்றை போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீச்சை முடிக்காததால், ராஜஸ்தான் அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, டெல்லி, குஜராத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.