India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகாலை 4 மணி வரை கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (மே 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் வட மாநிலங்களை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தானில் நேற்று முன்தினம் வரலாற்றில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2008- ராஜஸ்தான் ராயல்ஸ்,
2009- டெக்கான் சார்ஜர்ஸ்,
2010, 2011, 2018, 2021, 2023- சென்னை சூப்பர் கிங்ஸ்,
2012, 2014, 2024 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
2013, 2015, 2017, 2019, 2020 – மும்பை இந்தியன்ஸ்,
2016 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,
2022- குஜராத் டைட்டன்ஸ்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2018 – 2019 ஆம் நிதி ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய 3 உதவிப் பொறியாளர்கள், ஒரு செயற் பொறியாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்று (மே 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
* தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு வெப்பம் படிப்படியாக உயரக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
* மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில், பி.வி.சிந்து தோல்வி
* மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் தவறி கீழே விழுந்தார்
பிரதமர் மோடி மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அம்பானி மற்றும் அதானிக்காக பிரதமர் மோடி காலியாக வைத்துள்ள 30 லட்சம் பணியிடங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நிரப்பப்படும் என்ற அவர், விவசாயம் தொடர்பான அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியை நீக்குவோம் என்றார். பிரதமரின் வாயில் இருந்து பணவீக்கம் என்ற வார்த்தை எந்த இடத்திலும் வருவதே இல்லை எனவும் தெரிவித்தார்.
கேரளாவில் உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூணுபீடிகை பகுதியில் உள்ள உணவகத்தில் குழிமந்தி என்ற உணவை 70 பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு சைடிஷாக மயோனைஸ் தரப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்படவே, மருத்துவனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது என புதுவை முன்னாள் முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று INDIA கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற அவர், காங்கிரஸ் ஆட்சியில் ராமர் கோயிலை இடிப்பார்கள் என்ற பொய்யை பாஜக கூறுவதாக குற்றம் சாட்டினார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை சங்கி என்று நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.