India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் வந்த மிரட்டல் மின்னஞ்சலால் அலர்ட்டான போலீசார், உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, புரளி கிளப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
2011 உலகக் கோப்பைத் தொடரை வென்று கொடுத்ததற்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் கம்பீருக்கு உண்டு. இதுகுறித்து பேசும்போதெல்லாம் அவர் தோனி ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். பின்னர், களத்தில் விராட் கோலியுடன் பலமுறை மோதியதால் அவரது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியுள்ளார். அதே நேரம், பயிற்சியாளராக கொல்கத்தா அணியை வழிநடத்தி ஐபிஎல் கோப்பை வென்று சாதித்திருக்கிறார் கம்பீர்.
நடிகர் பிரபாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டா பதிவில், ‘ஒரு ஸ்பெஷல் நபர் வாழ்க்கையில் நுழைய போகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆர்வம் அதிகரித்த நிலையில், அவரது ரசிகர்கள் மணப்பெண் யார்? பெயர் என்ன? என்று இணையத்தில் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு பிரபாஸ், “நான் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஏனெனில், ரசிகைகளின் மனதைக் காயப்படுத்த விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது, பிரதமர் மோடி மௌனம் காத்து வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ரோரு நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “நாட்டின் எல்லையைப் பாதுகாக்க நாங்கள் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் போரிட்டோம். பாஜக ஆட்சியில், சீனா இந்திய நிலப்பகுதியில் வீடுகளை கட்டி வருகிறது. 56 அங்குல மார்பு எங்கே போனது என்றே தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் தொடங்க 5 நாட்களே இருக்கும் நிலையில், 1ஆம் தேதி முதல் வரப் போகும் முக்கிய மாற்றங்களைப் பார்க்கலாம்.
* கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம்
* ஜூன் 14 வரை கட்டணமில்லாமல் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம்
* ஓட்டுநர் உரிமத்தை டிரைவிங் ஸ்கூல் மூலமே பெறலாம். RTO செல்லத் தேவையில்லை
* சிறார் வாகனம் ஓட்டினால் ₹25,000 அபராதம்
மழை குறைந்ததால் சென்னை போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ வாட்டம் நிர்வாகம் குடிநீரை மட்டுமே வழங்குவதால் அதனை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறும் கார் கழுவுவதற்கு, தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இன்னும் ஐந்து நாள்களில் (ஜூன் 2) டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதில் ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் தனது முதலாவது போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தமுறை டி20 உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற கொல்கத்தா அணிக்கு கோப்பையுடன் ₹20 கோடி பரிசளிக்கப்பட்டது. தோல்வியடைந்த SRH அணிக்கு ₹13 கோடி பரிசு வழங்கப்பட்டது. SRH அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டிக்கு இந்தாண்டின் Emerging Player வீருதுடன் ₹10 லட்சமும், கொல்கத்தா வீரர் சுனில் நரேனுக்கு Most Valuable Player விருதுடன் ₹10 லட்சமும் வழங்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு தேவையான 350 தொகுதிகளைக் கைப்பற்றுவதை நோக்கி INDIA கூட்டணி சென்று கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “6 கட்டங்களாக 486 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில், INDIA கூட்டணி பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பதவி விலகப்போகும் மோடி, தற்போது தனது ஓய்வுக்காலத் திட்டத்தை வகுத்து வருகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது. SRH அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ₹20 கோடிக்கு வாங்கப்பட்டார். கொல்கத்தா பவுலர் மிட்ச்செல் ஸ்டார்க் ₹24 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், இருவரும் தங்களது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்தனர். அவர்களுடன், மெக்கர்க், மார்ஷ், க்ரீன், ஸ்டோய்னிஸ், ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.