India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணியுடனான நேற்றைய போட்டியில் டெல்லி அணி வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதைப் போலவே 9ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம் : கடவுள் வாழ்த்து
◾குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
◾விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தொலைவிலுள்ள பொருளை, 20 விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். மின்னணு திரைகளின் வெளிச்சத்தை முடிந்த அளவு குறைத்து வைக்கலாம். நள்ளிரவு கடந்து கம்யூட்டரில் வேலை செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
அண்ணனை (விஜய பிரபாகரன்) வெற்றிபெற வைத்தால் அப்பாவின் (விஜயகாந்த்) ஆத்மா சாந்தியடையும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ” இந்த தொகுதியில் அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என சிலர் வருத்தப்பட்டனர். அதற்கு பதிலாக என் அண்ணனை வெற்றிபெற செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.
இன்று (ஏப்ரல் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பாஜக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் 70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், 22 தொழிலதிபர்களிடம் இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் பாஜக. இந்தியாவை பணக்காரர்களுக்கான நாடாக மாற்ற பாஜக தயாராகி வருவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த தேர்தலில் மக்கள் இதற்கு சரியான தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக புதிய வரலாறு படைக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று குற்றம்சாட்டிய அவர், அவர்கள் இருவரும் தோற்கடிக்கப்பட வேண்டிய சக்திகள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு பாஜக தேவை என தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். வரும் தேர்தலில் அது நிச்சயம் வாக்குகளாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மன அழுத்தம், அதிக வேலை போன்றவை தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கின்றன. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வரும். உண்மையில் அது வரம். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்கும் பழக்கத்தை முயற்சிக்க வேண்டும். மேலும், இரவு உணவில் கூடுதல் கவனம் செலுத்தி திடமான, காரமான உணவுகளை தவிர்க்கலாம். தூங்குவதற்கு முன்னர் சூடான அல்லது மிதமான தண்ணீரில் குளியல் போடலாம்.
இன்று (ஏப்ரல் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ஒரே மேடையில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் பரப்புரை
➤ எனது மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி
➤ கவிதாவுக்கு ஏப்ரல் 15 வரை சிபிஐ காவல்
➤ விரைவில் அண்ணாமலை ஆடு மேய்க்க செல்வார் – ராஜன் செல்லப்பா
➤ மதுரையில் அமித்ஷா பரப்புரை
➤ நடிகர் அருள்மணி காலமானார்
➤ ஓய்வு பற்றி யோசிக்கவில்லை – ரோஹித்
Sorry, no posts matched your criteria.