India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக நாளை வெளியிட உள்ளது. பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் முன்னிலையில் சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “மோடியின் உத்தரவாதம், 2047ல் வளர்ந்த இந்தியா” என்ற தீம் கொண்டதாக மக்களவைத் தேர்தல் அறிக்கை இருக்குமென்றும் பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த 10 நாள்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.54,240க்கும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,780க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் பாஜக பூத் சிலிப் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. திமுக வாக்குச்சாவடி முகவருக்கு வந்த குறுந்தகவலில், இணையதள இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும், அதனை கிளிக் செய்தால் ஓடிபி கேட்பதாகவும், பின் வாக்காளர் எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்தால் பாஜகவின் பூத் சிலிப் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 18 அன்று இந்திய வீரர் விராட் கோலியின் மெழுகு சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் நஹர்கார் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கோலியின் சிலையை நிறுவ வேண்டுமென குழந்தைகளும், இளைஞர்களும் வேண்டுகோள் விடுத்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலையானது உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே கிரிக்கெட்டின் அடையாளமாக விராட் கோலி விளங்குகிறார்.
இந்திய விமானப்படை முன்னாள் விமானி ராகேஷ் ஷர்மா, 1984இல் விண்வெளிக்கு சென்றார். இந்நிலையில் தற்போது விஜயவாடாவை சேர்ந்த கோபிசந்த் தொட்டகுரா, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் மூலம் சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார். இதன்மூலம் விண்வெளி செல்லும் 2வது இந்தியர், முதல் இந்திய சுற்றுலா பயணி எனும் பெருமை பெறுவார். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.
ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்திருந்தார். அதன்படி, ஜெயிலர் 2 படத்திற்கு ‘ஹுக்கும்’ (Hukkum) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; கட்சி நிர்வாகிகளும் மரியாதை கொடுப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுவதால், அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அதிரடி காட்டியுள்ளார். நேற்று தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அவர், 2ஆவது பந்திலேயே சிக்சர் அடித்தார். குறிப்பாக, க்ருனால் பாண்டியா வீசிய 13ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து எதிரணியை திணறடித்தார். 2 Four, 5 Six என விளாசிய அவர், 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து முதல் ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
அதிமுக – தேமுதிக கூட்டணி மக்களும், தொண்டர்களும் விரும்பிய கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதிகாரம், பண பலத்தை மீறி இந்தக் கூட்டணி 2011 போல இப்போதும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று சூளுரைத்தார். மேலும், திமுகவின் இரண்டரை ஆண்டு ஆட்சியும், பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியும் மக்களிடம் பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கியுள்ளதால், நிச்சயம் மாற்றம் வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால், மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த, குடும்பம் ஒன்றுக்கு தலா ₹5000 வழங்கப்படும். இந்த நிதி விரைவில் மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
Sorry, no posts matched your criteria.