India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 2 சிக்ஸர்களும் விளாசப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் (201) விட்டுக்கொடுத்த இரண்டாவது வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். சாவ்லா (211) முதல் இடத்தில் உள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 161/7 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே LSG சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. LSG அணியில் அதிகபட்சமாக பூரண் 45, கே.எல்.ராகுல் 39, பதோனி 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்னைகளை விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்க மாட்டார்கள் என்றார். மேலும், காங்கிரஸின் கரங்களை வலுப்படுத்த இளைஞர்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இரண்டு சூர்யா இடம்பெற்றிருப்பதால், படத்தில் சூர்யா இரண்டு கேரக்டரில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் எப்படி இருக்கிறது என கமெண்ட் செய்யுங்கள்.
வெயில் காலத்தில் சூடான நீரைக் கொண்டு முகம் கழுவக் கூடாது. இது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். எப்போதும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுவதுதான் நல்லது. முகம் கழுவும் போது சோப்பை நேரடியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. உள்ளங்கையில் சோப்பைத் தேய்த்து பின்னர் முகத்தில் தேய்ப்பதுதான் சரியானது.
ஈரானுக்கு உரிய பதிலடி அளிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நிலைகள் மீது நேற்றிரவு ட்ரோன்கள், ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இது குறித்து பேசிய அவர், “எங்களுக்கு தீங்கு செய்வோருக்கு, நாங்களும் தீங்கு விளைவிப்போம் என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். தற்காப்பு மற்றும் எதிர் தாக்குதல் என எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக உள்ளோம்” என்றார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டி காக் 10, கே.எல்.ராகுல் 39, ஹூடா 8, ஸ்டாய்னிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து தற்போது வரை LSG 13 ஓவர்கள் முடிவில் 99/4 ரன்கள் எடுத்துள்ளது. பொறுமையாக ஆடிவரும் பதோனி 27, பூரான் 2 ரன்கள் எடுத்துள்ளனர். KKR தரப்பில் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
நடிகர் சாயாஜி ஷிண்டே நலம் பெற்று வருவதாக அப்டேட் வெளியிட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்டேட் வெளியிட்டிருக்கும் அவர், “நான் நலம் பெற்று வருகிறேன். விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி.யின் முதலீடு ஒரே ஆண்டில் 59% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத கணக்கீட்டின்படி ₹38,471 கோடியாக இருந்த முதலீடு, தற்போது ₹61,210 கோடியாக உயர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொருத்தமட்டில் ₹12,450.09 கோடியிலிருந்து ₹22,776.89 கோடியாகவும், அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தில் ₹8,495 கோடியில் இருந்து ₹14,305 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா, ஈரானுடன் நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவாக செயல்பட தயங்கமாட்டோம் எனக் கூறியது. இதற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.