India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
I.N.D.I.A கூட்டணியின் தலைவர்கள் பாதிப் பேர் ஜெயிலிலும்; மீதிப் பேர் பெயிலிலும் உள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால், எதிரணியில் அப்படி ஒருவர் இல்லை. திமுகவும் காங்கிரஸும் பிரிவினையை விதைக்கின்றன. தேசத்தைப் பற்றி சிந்திக்கும் மோடியின் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப புண்கள், அரிப்பு & பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள மூலிகைப்பட்டை குளியலை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. வேப்பம், சரக்கொன்றை, புங்கம், அரசம், ஏழிலைப்பாலை ஆகியவற்றின் பட்டைகளை தலா பத்து கிராம் எடுத்து, அவற்றை மஸ்லின் துணியில் முடிச்சிட்டு வெந்நீரில் போட்டு அதில் குளியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க 55 ஆண்டுகளாக ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்தத் தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையைப் பார்க்கிறேன். அவர் மூலம் அரசியல் மாற்றம் வரும் எனக் கூறினார்.
இளம் விக்கெட் கீப்பர் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் CSK அணியின் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வேடிக்கையாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பும்ரா சிறப்பாக பந்துவீசி இருந்தார். எங்கள் அணியின் மலிங்கா (பதிரனா) யார்க்கர்களை அபாரமாக வீசினார். துஷார், ஷர்துல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அதை நாம் மறக்கக் கூடாது. ரஹானே ஃபிட்னெஸ் ரீதியாக பின்னடைவை எதிர்கொண்டுள்ளார்” என்றார்.
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
கமல் – மணி ரத்னம் இணையும் ‘தக் ஃலைப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தும் விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை மறுதலிக்கும் வகையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், 5 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற மெக்சிகன் இயக்குநர் அல்போன்சோ குரோன், கமல், ரஹ்மான், அதிதி ராவ் ஆகியோருடன் அவரும் இடம்பெற்றுள்ளார்.
➤உலக கலை நாள். ➤1452 – ஓவியர் லியொனார்டோ டா வின்சி பிறந்த நாள். ➤1896 – முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்ஸில் நடைபெற்றது.➤1923 – இன்சுலின் மருந்து முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ➤1936 – பாலஸ்தீனத்தில் அரபுக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. ➤1976 – தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. ➤1995 – தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு தினம்.
கர்நாடகாவில் இருந்து தான் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்திற்கு பல நூறுகோடி ரூபாய் அளவிற்கு கறுப்பு பணம் அனுப்பப்படுகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மைசூரில் பேசிய அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு கடும் நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தான் தண்ணீர் லாரி & டேங்கர்களில் இந்த கருப்புச் சந்தை இயங்கி வருகிறது எனக் கூறினார்.
சாய் பல்லவியின் நடித்த படங்களை விரும்பி பார்ப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மனம்திறந்து கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “நல்ல கதையம்சம் உள்ள படங்களை சாய் பல்லவி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். நல்ல ஸ்கிரிப்ட், நல்ல கன்டென்ட் வரும் வரை பொறுமையாக காத்திருக்கிறார் இருக்கிறார். அவரை போல் நானும் இப்போது ஸ்கிரிப்ட் செலக்ஷனில் அதிக கவனம் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட குறிப்பில், “ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245.3 கோடி டாலரை எட்டியது” எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.