India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல், இபிஎஸ்ஸும் இன்று மத்திய, தென்சென்னையில் வாக்கு சேகரிக்கிறார்.
உலகின் சிறந்த ஆருடரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய தீர்க்கதரிசனங்கள் (தி ப்ராஃபசீஸ்) என்ற நூலில், ‘2024இல் உலகம் மிகப்பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் களம் இறங்கியிருப்பதைப் பார்க்கும் போது, கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
✍எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை; வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை. ✍எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம். ✍பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை; சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே! ✍ சில சமயம் முட்டாளாய்க் காட்சியளிப்பது அறிவுள்ள செயல். ✍சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்; பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு குட்டநாடன் பிளாக் (2018) மலையாளப் படத்திற்கு பின் படம் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தவர் நடிகை ராய் லட்சுமி. 6 வருடங்கள் கழித்து ‛டிஎன்ஏ’ என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் ரேச்சல் புன்னூஸ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், இதன் மூலம் தென்னிந்திய திரைப்படங்களில் தனது கதாநாயகி அந்தஸ்தை மீண்டும் தக்க வைக்க எண்ணுகிறாராம்.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
MI அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில், அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த தோனி இரு சாதனைகளைப் படைத்துள்ளார். இதன் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன், 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த அவர், 500.00 என்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் க்ருனால் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார்
பாஜக தயவில் தான் ஜெயக்குமார் கவுரவமான தோல்வி அடைந்தார் என்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கூறியுள்ளார். ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்த தான் தோற்றதற்கு காரணம் பாஜகதான் என்று ஜெயக்குமார் பேசிய தொடர்பாக பதிலளித்த அவர், “கடந்த தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தயவால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்கினார். இல்லை என்றால் சுத்தமாக வாஷ் அவுட் ஆகியிருப்பார்” எனக் கூறினார்.
▶ஏப்ரல் – 15 | ▶ சித்திரை – 02
▶கிழமை: திங்கள் | ▶திதி: சப்தமி
▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை
▶எமகண்டம்: காலை 10:30 – 12:00 வரை
▶குளிகை: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶சந்திராஷ்டமம்: விசாகம்
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளார். தமிழ், மலையாளம் உள்பட தென்னக மொழிகளில் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக மும்பையில் ஹோம் வொர்க்குகளைச் செய்துவருகிறார். வரலாற்றுப் பின்னணியிலான ‘கங்குவா’ படத்துக்காகக் குதிரையேற்றம், வாள் சண்டை போன்ற சில விசேஷப் பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.